அஸ்ஸாம் மாநிலத்தில் 4 நாள்களாக தொடர் கனமழை


 அஸ்ஸாம் மாநிலத்தில் 4 நாள்களாக தொடர் கனமழை பெய்துவருகிறது. பிரம்மபுத்திரா, கொபிலி உள்ளிட்ட முக்கிய ஆறுகளில் வெள்ள பெருக்கு ஏற்பட்டுள்ளது. மொத்தம் 20 மாவட்டங்களை சேர்ந்த 652 கிராமங்களில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. 2 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 7 பேர் உயிரிழந்துள்ளனர். 1,400-க்கும் மேற்பட்ட கால்நடைகள் வெள்ளித்தில் அடித்துச் செல்லப்பட்டன. 16 ஆயிரத்து 645 ஹெக்டேர் பயிர் நிலங்கள் மூழ்கின. 300 வீடுகள் மூழ்கின.தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்பு குழுக்களுடன் காவல்துறை, தீயணைப்புத்துறை அலுவலர்கள் தீவிர மீட்புப்பணியில் ஈடுபட்டுவருகின்றனர். 7 மாவட்டங்களில் 55 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,