மரண தண்டனை வேண்டாம் என்பதில் நம்பிக்கை உள்ளவன் நான்’’

 


"தொய்வில்லாத இந்த சட்டப்போராட்டத்தில், என் அம்மாவுடைய உழைப்பை உறிஞ்சிவிட்டேன் என்ற எண்ணம், வேதனை எனக்கு இருக்கும். இவ்வளவு தூரம் கஷ்டப்பட்டார்கள். எனவே, நியாயம் வெல்ல வேண்டும் என்ற எண்ணம் எப்போதுமே உண்டு. ஏதோ ஒரு வகையில் எல்லாருமே ஒவ்வொரு காலக்கட்டத்தில் தங்களுடைய சக்திக்கு மீறி அளவில்லாமல் உழைத்துள்ளார்கள். அவர்களை எல்லாம் வாழ்க்கையின் ஒருக்கட்டத்தில் வாய்ப்பு கிடைக்கிற பட்சத்தில் நேரடியாக சென்று நன்றி சொல்ல வேண்டும். இந்த நீண்ட போராட்டத்தில் மிகப்பெரிய திருப்புமுனை. அரசின் ஆதரவு என்ற தளத்தையும், மக்கள் ஆதரவு என்ற பெருந்தளத்தையும் உருவாக்கியதில் மிகப்பெரிய காரணம் என்னுடைய தங்கை செங்கொடியின் தியாகம்.

‘பேரறிவாளன் ஒரு நிரபராதி. அவரது வாக்குமூலத்தை தவறாக பதிவு செய்துவிட்டேன்’ என்று 2013-ல் தியாகராஜன் ஐ.பி.எஸ் அவர்கள் வெளிப்படையாக வந்து பேட்டி கொடுக்கும்போதும், உச்ச நீதிமன்றத்தில் வாக்குமூலமாக பதிவு செய்யும்போது மிகப்பெரிய திருப்புமுனையை கொடுத்தது. அதன்பிறகு, உச்ச நீதிமன்றத்தில் தீர்ப்பு கொடுத்த கே.டி.தாமஸின் பேட்டி, கட்டுரைகளும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. இதெல்லாம் சேர்ந்துதான் என்னை இங்கு கொண்டுவந்து நிறுத்தியிருக்கிறது. அதேபோல, நீதியரசர் கிருஷ்ணய்யரைப் பற்றியும் சொல்ல வேண்டும்.
நான் இன்று வெளியில் வந்ததற்கும் அவர்தான் காரணம். முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங்கிற்கும் அவர் கடிதம் எழுதினார். ‘மண்டியிட்டு கேட்டுகொள்கிறேன்’ என்று எனக்காக நீதியரசர் கிருஷ்ணய்யர் மன்மோகன்சிங்கிடம் கேட்டுகொண்டார். அதுமட்டுமில்லாமல், நான் நினைத்துகூட பார்க்க முடியாத வழக்கறிஞர்களை உச்ச நீதிமன்றத்தில் அமர்த்திகொடுத்திருந்தார். இந்த விடுதலை சாத்தியப்படுத்துவதற்கு 6 ஆண்டுகளுக்கும் மேலாக பொருளாதாரத்தையும், கட்டணத்தையும் எதிர்பார்க்காமல் மூத்த வழக்கறிஞர் கோபால் சங்கரநாராயணன் வாதாடியிருக்கிறார்.
அதேபோலவே, தமிழக அரசு தங்களுக்குள்ள அதிகாரத்தை நிலைநாட்டும் வகையில் அஃபிடவுட் ஃபைல் செய்தார்கள். மூத்த வழக்கறிஞரை வைத்து திறம்பட வாதாடி தீர்ப்பை பெற்றுத் தந்துள்ளனர். மரண தண்டனை காலங்களில் எங்களோடு துணையாக இருந்த மும்பையைச் சேர்ந்த வழக்கறிஞர் இக்மோர் சௌத்ரியையும் இந்த நேரத்தில் நினைத்துப் பார்க்கின்றேன். அதேபோல, ஊடகங்கள் இல்லையெனில் இந்த மாற்றம் ஏற்பட்டிருக்காது. உண்மைகள் வெளியில் வந்திருக்கிறது. சிறைத்துறை, காவல்துறையிலிருந்தும் எங்களுக்கு உதவி செய்திருக்கிறார்கள். 31 ஆண்டுகால சட்டப்போராட்டம்தான் என்னுடைய வாழ்க்கை. கொஞ்சம் காற்றை சுவாசிக்க வேண்டும். மூச்சு விட வேண்டும். ஆசுவாசப்படுத்திக் கொள்கிறேன். சட்டப்போராட்டத்துக்காகவே என்னுடைய வாழ்க்கையை செலவுப் பண்ணியிருக்கின்றேன். நீதி அமைப்பு முறையில் திறம்பட சட்டப்போராட்டம் நடத்தினால், ஏதோ ஒரு வகையில் வெற்றிப்பெறலாம். எதிர்காலம் குறித்த எல்லா கேள்விகளுக்கும் பின்னர் விடையளிக்கிறேன். மரண தண்டனை வேண்டாம் என்பதில் நம்பிக்கை உள்ளவன் நான்’’ என்றார் புன்னகை மலர்ந்த முகத்தோடு பேரறிவாளன்

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,