ம. இலெ. தங்கப்பா

 



தமிழ்க் கவிதையை உலகறியச் செய்த - ம. இலெ. தங்கப்பா  நினைவு நாள் இன்று மே 31, 2018  திருநெல்வேலி மாவட்டத்தில் குரும்பலாப்பேரி என்னும் சிறிய கிராமத்தில் 1934-ல் பிறந்த தங்கப்பாவின் தந்தையாரும் மாமாவும் தமிழாசிரியர்கள். ஆறு வயதிலேயே கம்ப ராமாயணத்தை அட்சர சுத்தமாகப் பாடும் திறன் தங்கப்பாவுக்கு இருந்துள்ளது. சிறுவயதிலேயே பாடல்களையும் எழுதத் தொடங்கி விட்டார்.


பாரதிதாசனின் வழிவந்த மரபுக் கவிஞரான ம. இலெ. தங்கப்பா, புதுச்சேரி தாகூர் கலைக்கல்லூரியில் உதவிப் பேராசிரியராகப் பணியாற்றுவதற்காக இடம்பெயர்ந்தார். புதுச்சேரி அரசின் கீழ் வெவ்வேறு கல்லூரிகளில் தமிழ் கற்றுக்கொடுத்த அனுபவம் உண்டு. பல தலைமுறை மாணவர்களுக்கு சங்க இலக்கியத்தையும் கவிதைகளையும் கற்பித்த, அந்த அனுபவமும் கவித்துவ உள்ளுணர்வும் சேர்ந்துதான் ‘லவ் ஸ்டாண்ட்ஸ் அலோன்’ (பெங்குயின் வெளியீடு) சங்க கவிதை மொழிபெயர்ப்பை அழகாக மாற்றுகிறது என்று வரலாற்றாய்வாளர் ஆ. இரா. வேங்கடாசலபதி குறிப்பிடுகிறார். இந்த நூலின்மொழிபெயர்ப்புக்காக 2012-ல் சாகித்ய அகாதமி விருதைப் பெற்றார். 2010-ம் ஆண்டு குழந்தை இலக்கியத்துக்கான சாகித்ய அகாதமி விருதையும் பெற்றவர்.


 இவர் மொழிபெயர்த்த முத்தொள்ளாயிரம் கவிதைகளும் ‘ரெட் லில்லிஸ் அண்ட் ஃபிரைட்டென்ட் பேர்ட்ஸ்’(Red lillies frightened birds) நூலும் உலகளவில் தமிழின் செம்மொழி அந்தஸ்தை கவிதை வாசகர்களிடம் நிறுவின. வள்ளலாரின் திருவருட்பாவை ‘சாங்ஸ் ஆஃப் கிரேஸ்’ (Songs of Grace) என்ற பெயரில் மொழிபெயர்த்தார் தங்கப்பா. குழந்தை இலக்கியம், இயற்கையியல் ஆகியவற்றில் ஈடுபாடுகொண்டவர்.




Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,