பிரஞ்சுக் கலாசாரம் உன்னதமானது


 பிரஞ்சுக் கலாசாரம் உன்னதமானது என்கிறார், கி.ரா. பொறப்பு எடுத்த நோக்கம் என்ன? சந்தோஷமா வாழணும். அதுதான் நோக்கம். சந்தோஷமா எப்படி வாழறது? பறவைகளை மாதிரி மனுஷன் வாழணும். எந்தக் கட்டுப்பாடும் இல்லாம, அவனவன் நினைச்ச மாதிரி சுதந்திரமா, சந்தோஷமா வாழணும். அதுக்கு எந்தக் கலாசாரம் எடம் கொடுக்குது? இந்தியக் கலாசாரம் எடம் கொடுக்கலை. அட, விருப்பப்பட்ட ஒரு மனுஷாளோட சேர்ந்து வாழ்ற சுதந்திரம்கூட இங்கே இல்லையே? ஒரு காலத்துல கிராமங்கள்ல அந்தக் கலாசாரம் இருந்துச்சு. விருப்பம்போல வாழலாம். புடிச்சவங்களோட சேர்ந்து வாழலாம்; புடிக்கலைன்னா அத்துக்கிட்டுப் போய்டலாம். இன்னொண்ணு சேர்த்துக்கிடலாம். புள்ளைங்களுக்கும் தெரியும். அம்மாதான் நம்மளோட அம்மா, நம்ம அப்பா இவரு இல்லைங்கிறது. ஊருக்கும் தெரியும். யாரும் எதையும் தப்பா நெனைக்கிறது இல்லை. சந்தோஷமா இருந்தாங்க. ஆனா, அந்த மாதிரி கிராமம் எல்லாம் இப்ப குறைஞ்சுக்கிட்டு வருது. நகரத்துக்காரன் எல்லாம் சேர்ந்து கிராமத்தைப் புனிதமாக்கிட்டான். கட்டுப்பாடு கட்டுப்பாடுனு பேசி வாழ்க்கையையே பொழைப்பா மாத்திக்கிட்டு ஆளாளுக்குப் பைத்தியம் பிடிச்சு அலையுறோம் என்கிறார், கி.ரா.

நன்றி: இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ்

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,