பூக்களால் உருவாக்கப்பட்ட வீடு.

 

பூக்களால் உருவாக்கப்பட்ட வீடு.. கண்ணை கவரும் உதகை ரோஜா மலர் கண்காட்சி


!


நீலகிரியில் ஆண்டுதோறும்  கோடை விழாவின் ஒரு பகுதியாக நடைபெறும்  ரோஜா மலர் கண்காட்சி நடைபெறும்.கொரொனா காரணமாக  2  ஆண்டுகளுக்குப் பின்பு  14/5/2022 அன்று ரோஜா கண்காட்சி  தொடங்கியது.

உதகை அரசு ரோஜா பூங்காவில் 17 வது ரோஜா கண்காட்சி இன்று துவங்கியது. 89,000 ரோஜா மலர்களை கொண்டு பல்வேறு வடிவங்களில் அலங்காரம் செய்யப்பட்டுள்ளதை  சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் ரசித்தனர்.

நீலகிரியில் ஆண்டுதோறும்  கோடை விழாவின் ஒரு பகுதியாக  ரோஜா மலர் கண்காட்சி நடைபெறும். அந்த வகையில்  ரோஜா கண்காட்சி  தொடங்கியது.

14.5.2022 மற்றும் 15,5,2022  என இரு நாட்கள் நடைபெற்றது இந்த  ரோஜா கண்காட்சியில் 89 ஆயிரம் ரோஜா மலர்களைக் கொண்டு பல்வேறு அலங்கார சிற்பங்கள் வைக்கப்பட்டன.

குறிப்பாக 41 ஆயிரம் ரோஜா மலர்களை கொண்டு கொண்டு மரத்தின் மேல் வீடு, 9000 ரோஜாக்களை கொண்டு படச்சுருள்,  6,000 ரோஜாக்களை கொண்டு குழந்தைகளைக் கவரும் வகையில் கார்ட்டூன் சித்திரங்களான மோட்டு , பட்லு, 5000 ரோஜாக்களால் பியானோ ஆகியவையும் , உதகை தோன்றி 200 ஆண்டுகளானதை  நினைவு கூறும் வகையில் ரோஜாக்களால் வடிவமைக்கப்பட்ட 00TY 200 ஆகிய அலங்கார வடிவங்கள் வைக்கப்பட்பது.

தமிழகத்தில் ஈரோடு, தர்மபுரி, திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்தும் தோட்டக்கலை துறை சார்பில் ரோஜாக்களால் வடிவமைக்கப்பட்ட அலங்கார சித்திரங்கள் சுற்றுலா பயணிகளை வெகுவாக கவரும் வகையில் வடிவமைக்கப்பட்டதையும் .  ஒரே இடத்தில் லட்சக்கணக்கான ரோஜா மலர்களை  சுற்றுலா பயணிகள் கண்டு  ரசித்து சென்றனர்.


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,