விடுதலைப் போராட்ட வீரர் கண.முத்தையா பிறந்த நாள்

 விடுதலைப் போராட்ட வீரர் கண.முத்தையா பிறந்த நாள் மே 24, 1913




நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் தலைமையில் இந்திய விடுதலைக்காக போராடியவரும், தமிழ் பதிப்புலக முன்னோடியுமான கண.முத்தையா சிவகங்கைமாவட்டம், மதகுபட்டியில் ஜமீன் குடும்பத்தில் 1913- மே 24ல் பிறந்தவர்.

 தந்தை கண்ணப்பன் மறைவால் மெட்ரிக் தேர்வுஎழுத இயலாது, தந்தையின் வணிகத்தை மீட்டெடுத்தார்.இந்திய விடுதலை இயக்கப் போராட்டங்களில் பங்கேற்றவர். தமிழ், ஆங்கிலம், இந்தி மொழிகளில் புலமை பெற்றவர


.

 1936-ல் வணிகத்திற்காக பர்மா சென்று, ‘தன வணிகன்’இதழின் உதவி ஆசிரியராகப் பணியாற்றிவர். பின்னர். 1937-இல் ‘ஜோதி’ மாத இதழில் நிர்வாகப் பொறுப்பேற்றார்.

பர்மாவின் ரங்கூன் நகரை அடுத்த கம்பைஎனும் ஊரில் உயர்நிலைப் பள்ளியின் நிர்வாகப் பொறுப்பில் பணியாற்றியபோது, 1945-ல் நேதாஜியின் இந்திய தேசிய ராணுவத்தில் அதிகாரியாகப் பணியாற்றினார். நேதாஜியின் மேடைப் பேச்சுகளை மொழிபெயர்த்தார். நேதாஜியைக் கடைசியாக சந்தித்த வெகு சிலரில் இவரும் ஒருவர்


.

.பர்மாவில் போர்க் கைதியாக ஓராண்டு காலம் சிறையில் இருந்தபோது, இராகுல் சாங்கிருத்தியாயனின் ‘பொதுவுடைமைதான் என்ன’ , ‘வால்காவிலிருந்து கங்கை வரை’ எனஇரண்டு நூல்களையும் தமிழில் மொழி பெயர்த்தார்

.1946-இல் தமிழ் புத்தகாலயத்தை நிறுவினார். நேதாஜியின் ‘புரட்சி’ என்ற நூலை முதன் முதலில் பதிப்பித்து வெளியிட்டார். மாவோ,கார்க்கி, ஸ்டாலின் ஆகியோரது நூல்களைத் தமிழில் பதிப்பித்து வெளியிட்டார். தமிழ்இலக்கியவாதிகளின் நூல்களை மட்டுமல்லாது, பிரேம்சந்த் போன்ற இந்தி மொழி இலக்கியவாதிகளின் நூல்களையும் தமிழில்வெளியிட்டார்

# வெளிநாடுவாழ் தமிழ் படைப்பாளிகள், திறனாய்வாளர்கள், அறிஞர்களின் நூல்களையும் தமிழ் வாசகர்களுக்கு வழங்கினார். ஞானபீடம், சாகித்ய அகாடமி போன்ற விருதுகளை வென்ற படைப்புகளை வெளியிட்டார். புதுமைப்பித்தனின் கட்டுரை நூலை முதலில் பதிப்பித்தவர் இவரே.

# ஜீவா, பெரியார், காமராஜர், அண்ணா, பக்தவத்சலம் உள்ளிட்ட தலைவர்கள் இவரிடம் அன்பும் நட்பும் கொண்டிருந்தனர். தமிழுக்கும் தமிழகத்துக்கும் எதிரான எந்த படைப்பையும் பிரசுரிப்பதில்லை என்பதை கொள்கையாகவே கொண்டவர்.

# நாடு விடுதலை அடைந்த பிறகு, நண்பர் ஒருவர் இவரிடம் வந்து, ‘‘ஐஎன்ஏ தியாகிகளுக்கு மத்திய அரசு 5 ஏக்கர் நிலம் தருகிறதாம்’’ என்று சொல்லி ஒரு விண்ணப்பத்தைக் கொடுத்தார். இவரோ, ‘‘இந்தியாவே எங்களுக்கு சொந்தம் என்று நினைத்தேன். வெறும் 5 ஏக்கரை வாங்கிக் கொடுத்து என்னை ஏன் பிரிக்கப் பார்க்கிறாய்?’ என்று கேட்டு கையெழுத்திட மறுத்துவிட்டார்.

# நூல்கள் விற்பனையை அதிகரிக்க கல்கியின் தலைமையில் 1951-ல் ஒரு இயக்கம் தொடங்கினார். இந்த அமைப்பு சென்னையில் முதன் முதலாக தமிழ்ப் புத்தகக் காட்சியை நடத்தியது. எழுத்தாளர், பதிப்பாளர் சங்கங்களின் நிர்வாகியாகவும் இருந்து செயலாற்றினார். 1962-ல் நடத்தப்பட்ட பாரதி விழாவில் இவரது பங்களிப்பு மகத்தானது.

# சுதந்திரப் போராட்ட வீரர், படைப்பாளி, பத்திரிகையாளர், மொழிபெயர்ப்பாளர், நூல் வெளியீட்டாளர் எனப் பன்முகப் பரிமாணம் கொண்ட கண. முத்தையா 84-வது வயதில் (1997) மறைந்தார்.









Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,