சென்னை அறம் செய்ய விரும்பு லயன்ஸ் கிளப்பின் தொடரும் சேவை

 

சென்னை  அறம் செய்ய விரும்பு லயன்ஸ் கிளப்பின் தொடரும் சேவை

 


 

சென்னை திரு.வி.க நகரில்  வசிக்கும் திருமதி மகா கலைவாணி வயது 32 இவருக்கு  ஒன்பது வருடங்களுக்கு முன் முதுகில்  ஸ்பைனல் கார்டில்  கான்சர் கட்டி வந்ததால் அதனை  ஆபரேஷன் செய்து கொண்டார் ஆபரேஷன் முடிந்த பிறகு அவரின் கைகளும் கால்களும்  செயலிழந்து போய் விட்டது. மருத்துவர்கள் அதன் பின் மருத்துவர்கள் மேற்கொண்ட சிகிச்கைகள் பலனளிக்கவில்லை, பிசியோ தெரபி மூல மாக சரி செய்ய இயலும் என சொன்னதால் கடந்த 9வருடங்களாக படுத்த படுக்கையாக உள்ளார்

 

 கடந்த 9 வருடங்களாக  படுத்த படுக்கையாக இருக்கும் இவரின் நிலைமை எனவே மிகவும் வருந்ததக்கது .இவர் அவ்வப்போது பிசியோதெரபி பயிற்சி எடுத்திருக்கிறார்

தொடர்ச்சியாக பண வசதியில்லாததால் தொடர்ந்து எடுக்க முடியவில்லை . இவருக்கு ஒரு பெண் குழந்தை தற்போது நான்காவது வகுப்பு படிக்கிறாள்

 இவரையும் இவர் குழந்தையையும் இவருடைய விதவை தாயார் கவனித்து வருகிறார்

இவருடைய கணவர் இவரை பிரிந்து 2வது திருமணம்  செய்து கொண்டார்


வாடகை வீட்டில் வசிக்கும் இவர்களுக்கு வேறு எந்த  வருமானமும் இல்லை உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அளிக்கும் நன்கொடை மூலமாகதான் தினசரி வாழ்க்கை நடந்து கொண்டு வருகிறது

கடந்த 4 மாதங்களாகதான் தொடர்ச்சியாக பிசியோ தெரபி பயிற்சிகளை மேற் கொண்டு வருகிறார்.

திருமதி மகா கலைவாணி அவர்கள்  பயன்படுத்தி வந்த  கட்டில்  பயனற்று போனதால் புதிய கட்டில் தேவைப்பட்டது, வேறு கட்டில் வாங்க முடியாத நிலையில் பிசியோ தெரபி மருத்துவர் திரு சுரேஷ் அவர்கள் நமது லயன்ஸ் கிளப்பான அறம்  செய்ய விருமபு உறுப்பினரும் பீப்பிள் டுடே பத்திரிகையின் கௌரவ ஆசிரியருமான  திரு என் ,எஸ் ,உமாகாந்தன் அவர்களுக்கு தெரிவித்தார்




அவர் உடனே உதவி செய்ய எண்ணி புதிய கட்டிலின் தொகையான ரூபாய் 8,000 த்துக்கான தொகையை ஏற்பாடு செய்தார் ,அவர் பங்கிற்கு ரூ .5,000ம் ,பீப்பிள் டுடே பத்திரிகை சார்பாக ரூ 2,000 மும் மற்றும் அவரின் மகனான திரு உ.முரளி கிருஷ்ணகுமார் கொடுத்த ருரூ 1,000ம் சேர்த்து ரூபாய் 8,000 த்துக்கான தொகை கொடுத்து நமது லயன்ஸ் கிளப்பான அறம் செய்ய விரும்பு மூலம் கட்டிலை வாங்கி திருமதி மகா கலைவாணியின் இல்லம் சென்று அவரின் தாயாரிடம் இன்று 07.05,2022 அன்று ஒப்படைத்தார்


நமது அறம் செய்ய விரும்பு லயன்ஸ் கிளப் உறுப்பினரும் பீப்பிள் டுடே பத்திரிகையின் கௌரவ  ஆசிரியருமுன  திரு என் .எஸ். உமாகாந்தன் அவர்களுக்கும் ,பீப்பிள் டுடே பத்திரிகையின் ஆசிரியர் திரு .கோ, சத்யநாரயணன் அவர்களுக்கும் திரு உ. முரளி கிருஷ்ணகுமார் அவர்களுக்கும் சென்னை அறம் செய்ய விரும்பு லயன்ஸ் கிளப் சார்பாக நன்றி மற்றும் வாழ்த்துகள்

 


 

லயன்.எஸ், பாலசந்தர் .

செயலாளர் ,அறம் செய்ய விரும்பு

லயன்ஸ் கிளப் சென்னை

 

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,