தேங்காயுடன் வேர்க்கடலை சேர்த்து சட்னி

 


தேங்காயுடன் வேர்க்கடலை சேர்த்து சட்னி செய்து இருக்கீங்களா?


இதுவரை தேங்காய் சட்னியை தனியாக அரைத்து இருப்போம், அதே போல தான் வேர்க்கடலை சட்னியும். ஆனால் இந்த பதிவில் வேர்க்கடலை, தேங்காய், பொட்டுக்கடலை என மூன்றும் சேர்த்து அரைக்கும் சட்னியை பற்றி தான் பார்க்க போகிறோம். 

 தோசை, இட்லி, உப்புமா, என எல்லா டிபன் வகைகளுக்கும் இந்த சட்னி பெஸ்ட் காமினேஷன். வாங்க இதன் செய்முறையை பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:

தேங்காய், பொட்டுக்கடலை, வேர்க்கடலை, பச்சை மிளாய், வெங்காயம், காய்ந்த மிளகாய் , கறிவேப்பிலை, கொத்தமல்லி, கடுகு, எண்ணெய், புளி, உப்பு.

செய்முறை:

1. முதலில் கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் வேர்க்கடலை, பொட்டுக்கடலை சேர்த்து வறுக்க வேண்டும்.

2. பின்பு அதனுடன் பச்சை மிளகாய், உப்பு, புளி சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.

3. இறுதியாக அதில் தேங்காய் துருவல், கொத்தமல்லி சேர்த்து வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

4. இந்த கலவையை மிக்ஸியில் அரைத்துக் கொள்ள வேண்டும்.

அடுத்தது கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, காய்ந்த மிளகாய், நறுக்கிய வெங்காயம் கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும்.

 இந்த தாளிப்பை சட்னியுடன் சேர்த்து கலந்து பரிமாறினால் போதும் சூப்பரான டேஸ்டியான தேங்காய் - வேர்க்கடலை சட்னி தயார்.


Comments

Popular posts from this blog

:இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலான பெண்களுக்கு மாதவிடாய் கோளாறுகள்? வாழ்வியல் முறையை மாற்றுங்கள்!

“சமயம் வளர்த்த தமிழ்” என்னும் தலைப்பில் திரு என்.அசோகன் கூடுதல் பதிவாளர் (ஓய்வு )அவர்களின் சொற்பொழிவு

சிறுநீர் அடங்காமைக்கு ( urinary incontinence) யோக மற்றும் இயற்கை மருத்துவம்