எத்தனை நீண்ட நெடிய சட்ட போராட்டம் இந்த முதுமையிலும்,

 


"அரசியல்

பார்வையில்

ஆயிரத்தெட்டு

தர்க்கம்

உண்டு

இன்றைய

உச்ச நீதிமன்றத்தின்

பேரறிவாளன்

விடுதலை

அதிரடி

தீர்ப்பு..!!


ஆயினும்

தனிப்பட்ட

முறையில்

அந்த தாயுடன்

பழகி

இருக்கிறேன்,

அறிவையும்

இரண்டு முறை

வேலூர்

மத்திய

சிறைச்சாலையில்

சந்தித்து

இருக்கிறேன்,

தானும்

படித்து

மற்றவர்களையும்

படிக்க

வைத்திருக்கிறார்

சிறைச்

சாலையில்,

நன்னடத்தை..!!


இளம் வயது

பேரறிவாளன்

தமிழ் தேசிய

அரசியலால்

உந்தப்பட்டு

தன்

தந்தை

குயில்

தாசனின் 

பெரியாரிய

கருத்தியல்

பார்த்து

வளர்ந்தவர்..!!


தமிழகமே

அன்று

அந்த

ஈழ மக்கள்

அவல நிலை

பார்த்து 

உதவத்

துடித்தது,

அன்றைய

முதல்வர்

பொன்மனச்

செம்மல்

உட்பட..!!


விசாரணையில்

கூட

(அந்த துன்பியல்

சம்பவம்

மூண்றே

பேருக்கு, இயக்க தலைமைக்கு

மட்டுமே

தெரியும் நடக்கும்

வரை என தெரிவிக்க பட்டுள்ளது ).!! 


உணர்ச்சி

வசப்பட்டு

அந்த உதவி

எதற்கென்றே

தெரியாமல்

சின்ன உதவி

செய்தவர்கள்

தான்

பலிகடா

ஆனார்கள்..!!


நான் முறைப்படி

சட்டம்

படிக்கவில்லை, 

ஆயினும்

பல

வருடங்களுக்கு

முன்பே

சொன்னேன்,

ஏழு பேர்

விடுதலை

என்பது சட்ட

சிக்கல்கள்

நிறைந்தது,

தனியாக

பேரறிவாளன்

விடுதலையை

மட்டும்

முன்னெடுத்து

செல்லுங்கள்

என,

இதோ இன்று

அந்த ஒரு

முன்னெடுப்பு

தான்

அறிவின்

விடுதலைக்கு

உதவி

இருக்கிறது..!!


மீண்டும்

சொல்கிறேன்

இன்றைய

இளைஞர்கள்

அரசியல்வாதிகளின் மேடைப்பேச்சு

கேட்டு புல்லரித்துப்

போய்

உணர்ச்சிவசப்பட்டு

செய்யும்

சிறு தவறும்

அவர்கள்

வாழ்க்கையை

திசை

திருப்பி விடும்..!!


எத்தனை

நீண்ட நெடிய

சட்ட போராட்டம்

இந்த

முதுமையிலும், 


மனமார்ந்த

நல்வாழ்த்துக்கள்

அம்மா,

மகிழ்ச்சி

அறிவு..!! "


கவிமுரசு பிரவீன்.


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

ஆரஞ்சுப் பழத்தின் பயன்கள்:

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி