ஜூன் 2 - இன்று பன்னாட்டு பாலியல் தொழிலாளர் நாள்

 


ஜூன் 2 - இன்று பன்னாட்டு பாலியல் தொழிலாளர் நாள்    International Whores Day - பாலியல் தொழிலாளர்கள் குற்றவாளிகள் அல்ல அவர்கள் பொருளாதார நெருக்கடி மற்றும் சூழலில் பாதிக்கப்பட்டவர்கள் என உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. 2004 இல் பாலியல் தொழிலாளர்களுக்கு எதிரான வன்முறையை தடுக்க கர்நாடக காவல் துறை சுற்றறிக்கை ஒன்றினை வெளியிட்டது, “எனினும் உடல் ரீதியான மற்றும் மன ரீதியான வன்முறை தொடர்ந்து பாலியல் தொழிலாளர்களுக்கு எதிராக நடக்கிறது” என போராட்டத்தில் பங்கேற்ற சந்தன மகிலா சங்கம் எனும் அமைப்பை சார்ந்த கீதா கூறுகிறார்.


இந்த சமூகத்தின் விளிம்புகளில் நின்று கொண்டிருக்கும் பாலியல் தொழிலாளர்களின் குரல் எந்த வித முன்முடிவுகளும் இல்லாமல் கேட்கப்பட வேண்டியவை. மற்ற வேலையை போல பாலியல் தொழிலையும் ஒரு வேலையாக அங்கீகரிப்பது இந்தியா போன்ற சமூகத்தில் ஒரு நீண்ட போராட்டத்தை பிடிக்கும் எனினும், இன்று வன்முறையற்ற கண்ணியம் மிகுந்த வாழ்க்கை அவர்களுக்கும் நிச்சயம் உறுதிப்படுத்தப்பட வேண்டும்.


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

ஆரஞ்சுப் பழத்தின் பயன்கள்:

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி