ஹபீப் தன்வீர் நினைவு தினம்
ஜூன் 8
இந்திய நாடக ஆசிரியரும், இயக்குனருமான ஹபீப் தன்வீர் நினைவு தினம் இன்று.
ஹபீப் ஸாப் என்று நண்பர்களால் அழைக்கப்படும் ஹபீப் தன்வீர் ஹிந்தி, உருது ஆகிய மொழிகளில் சிறந்த நாடகாசிரியரும், நாடக இயக்குநரும், விமர்சகரும், கவிஞரும், நடிகரும் ஆவார்.
தான் பிறந்த சத்தீஸ்கட் தனி மாநிலம் ஆவதற்கு முன்னாலேயே அதன் கிராமீயப்பெருமைகளை உலகுக்கு கொண்டு சேர்த்தவர். கிராமத்தில் மட்டுமே வாழ்ந்த ‘மக்கள் நாடகத்’தை நகர்ப்புறங்களுக்கு எடுத்துச்சென்றவர். புலழப்பெற்ற மக்களிடம் வரவேற்பை பெற்ற பல நாடகங்களை எழுதியுள்ளார்
அவரது ஆரம்பகால நாடகங்களில் மிகவும் புகழ்பெற்றது ஆக்ரா பஸார் என்ற நாடகம் இந்திய தியேட்டர் இயக்கத்திற்கு ஒரு தீவிரமான புதிய ஆற்றலை அளித்தது அவர் முற்போக்கு எழுத்தாளர்கள் சங்கம் மற்றும் இந்திய மக்கள் தியேட்டர் சங்கம் (ஐபிடிஏ) போன்ற அமைப்புகளில் பெரும்பங்காற்றினார் பத்ம ஸ்ரீ மற்றும் பத்ம பூஷண், ஹபீப் தன்வீர் உட்பட பல விருதுகளை பெற்றவர் 1972 ஆம் ஆண்டில் ராஜ்ய சபாவுக்கு பரிந்துரைக்கப்பட்டார். 8 ஜூன் 2009 இல் அவர் மரணமுற்றார்
Comments