சர்க்கரைவியாதி கட்டுப்பாட்டிற்குள் வருவதற்கான இயற்கை மருத்துவம்.


சர்க்கரைவியாதி கட்டுப்பாட்டிற்குள் வருவதற்கான  இயற்கை மருத்துவம்.



நாம் உண்ணும் உணவே நமக்கு மருந்தாகும். எனவே நாம் உணவின் மூலமாகவே இரத்த சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரலாம்.

ஒரு பாத்திரத்தில் 3 டம்ளர்கள் தண்ணீர் எடுத்துக்கொண்டு அதனுடன் ஒரு பெரிய நெல்லிக்காய்,நாவல் கொட்டைகள் 2,கொய்யா இலைகள் 2 , கருவேப்பிலை 4 கொத்து,ஒரு தேக்கரண்டி வெந்தயம்,ஒரு தேக்கரண்டி சீரகம்,2 பல் பூண்டு ஆகியவற்றை சேர்த்து பாதியாகும் வரை கொதிக்க வைத்து வடிகட்டி காலையில் ஆகாரத்திற்குக்கு 30 நிமிடங்களுக்கு  முன் தொடர்ந்து 10 நாட்கள் அருந்தினால் கட்டுபாட்டில் இல்லாத சர்க்கரையின் அளவு கட்டுப்பாட்டிற்குள் வரும்.

தினமும் 40 முதல் 50 நிமிடங்கள் நடை பயிற்சி மேற்கொள்ளுதல், தினமும் ஊறவைத்த பாதாம் பருப்பு 4 சாப்பிடுதல்,வெந்தயக்கீரை,முருங்கை கீரை,ஆரைகீரை,கோவகாய்,வாழைத் தண்டு,வாழைப்பூ,வெங்காயம்,பூண்டு,ஆலிவ் எண்ணெய்,பீன்ஸ்,அவரக்காய்,மணத்தக்காளிக் கீரை பசலைக் கீரை,கொத்தவரங்காய்,சுரைக்காய்,பீர்க்கங்காய்,கத்திரிக்காய்,தண்டுக்கீரை,வல்லாரைக்கீரை,எலுமிச்சம் பழம்,கொய்யாப்பழம்,ஆரஞ்சு பழம்,பிளம்ஸ்,பேசன் பழம் போன்ற உணவு வகைகளை சேர்த்துக் கொள்ளுதல்இரத்தசார்க் கரையின் அளவை கட்டுப்பாட்டில் வைக்க உதவும்.

வாழ்க வளமுடன்




Dr. ரேவதி பெருமாள்சாமி .

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,