சினிமாவுக்கு போன இலக்கியவாதிகள்'

  எழுத்தாளர் அறந்தை நாராயணன் எழுதிய, 'சினிமாவுக்கு போன இலக்கியவாதிகள்' என்ற கட்டுரையிலிருந்து: பிரபல எழுத்தாளர், ஜெயகாந்தனின் சிறுகதைகள், குறு நாவல்களும், பத்திரிகைகள் வாயிலாக, லட்சோப லட்சம் வாசகர்களை கவர்ந்தவை. இவரை பற்றி, கவிஞர் கண்ணதாசன் கூறியது...





'... வளைந்தும், குழைந்தும், நேரத்துக்கு தக்கபடி அனுசரித்து போகும் உலகத்தில், அவர், ஒரு நிமிர்ந்த தென்னை. தனக்கு சரியென்று படும் ஒரு விஷயத்தை, மற்றவர்களுக்கு தவறென்று படுமாயினும், பல்லாயிரம் மக்கள் அடங்கிய சபையில், தைரியமாக சொல்லக்கூடிய ஆற்றல் உடையவர், ஜெயகாந்தன்.
'அவரது நிலத்தில் தோன்றிய விளைச்சல்களுக்கு, அவரே விதை, அவரே நீர், அவரே உரம். 'பிடிவாதக்காரர்; எதையும் எடுத்தெறிந்து பேசுபவர்...' என்று, அவரைப் பற்றி கூறுவர். இந்த சுபாவம், புதுமைப்பித்தனிடம் கூட இருந்தது. ஜெயகாந்தனிடம் கொஞ்சம் அதிகம். அவ்வளவு தான்...
'ஆனால், முன்னொருவர் இல்லை, பின்னொருவர் இல்லை என்ற இடத்தை, ஜெயகாந்தன் பிடித்திருப்பதை யாரும் மறுக்க முடியாது.
நடுத்தெரு நாராயணன்
நன்றி: தினமலர்



Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,