பனகல் அரசர்
- பனங்கன்டி ராமராயநிங்கார் என்னும் இயற்பெயர் கொண்ட பனகல் அரசர் பிறந்த நாள் (ஜூலை 9, 1866 – டிசம்பர் 16, 1928) நீதிக்கட்சியின் தலைவர்களுள் ஒருவரும், சென்னை மாகாணத்தின் இரண்டாவது முதலமைச்சருமாவார். இவரது ஆட்சியிலே தாழ்த்தப்பட்ட ஏழை மாணவர்களுக்கு இலவச மதிய உணவு திட்டம் ஆரம்பிக்கப்பட்டது.
* இந்து சமய அறநிலையத்துறை சட்டம் இயற்றப்பட்டு கோடிக்கணக்கான
கோவில் சொத்துக்கள் அரசின் வசம் நிர்வகிக்கப்பட வகை செய்யப்பட்டது.
* அரசுப்பணியில் வகுப்புவாரி இடஒதுக்கீடு வழங்க நடவடிக்கை எடுத்தார். தலித்துகள் “பறையர்” என்று குறிக்கப் படாமல் “ஆதி திராவிடர்” என்று குறிக்கப்பட வேண்டும் என்ற சட்டம் கொண்டு வந்தார்.
* சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் அமைத்தார்.
* சென்னையை விரிவு படுத்தினார்.
இப்போதுள்ள தியாகராயர் நகர் இவரின் காலத்தில்
உருவாக்கப்பட்டது.
* பரந்து விரிந்த சென்னை உருவாக
காரணமான பனகல் ராஜா நினைவாகவே பனகல் மாளிகை, பனகல் பூங்கா என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. பனகல் பூங்காவினுள் இவரது சிலையும் நிறுவப்பட்டுள்ளது
Comments