முன்னோர்கள் நம்மைத்தேடி வரும் ஆடி அமாவாசை*

முன்னோர்கள் நம்மைத்தேடி வரும் ஆடி அமாவாசை*




வானவியல் கணிப்பின் படி சூரியனும் சந்திரனும் ஒரே ராசியில் இணையும் காலமே அமாவாசை ஆகும். ஜோதிட சாஸ்திரத்தில் சூரியனை, “பிதுர் காரகன்” என்கிறோம். சந்திரனை, “மாதுர் காரகன்” என்கிறோம். எனவே, சூரியனும் சந்திரனும் பிதா மாதாக்களாகிய வழிபடு தெய்வங்களாகும்.முன்னோர்களுக்கு திதி தர்ப்பணம் கொடுத்து வழிபடும் ஆடி அமாவாசை, இந்த ஆண்டு குருவாரம் (வியாழக்கிழமை) புனர்பூசம், பூசம் கலந்த நன்னாளில் ஏற்படுகிறது. அதுவும், காலச்சக்கரத்தின் நான்காவது ராசியான சந்திரனுக்குரிய கடக ராசியில், சூரியன் இருக்கும் பொழுது இந்த அமாவாசை நிகழ்வது சிறப்பு. ஒரு வருடத்தை இரண்டு அயனங்களாகப் பிரித்துள்ளனர். அதில், தேவ கணங்களுக்கு அதிக சிறப்பு உள்ள நாள்களாக உத்தராயணமும், பித்ருக்களுக்கு அதிக சிறப்பு உள்ள நாட்களாக தட்சிணாயனமும் திகழும்.


இவற்றில் தட்சிணாயன புண்ணிய காலத்தில் வருவது ஆடி அமாவாசை. தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங்கு ஐம்புலத்தாறு ஓம்பல் தலை என்பது குறள்நெறி. அதில் முதலில் சொல்லப்பட்டவர்கள் தென்புலத்தார் என்று கொண்டாடப்படும் முன்னோர்கள். ஒரு ஜாதகத்தில் ஐந்தாம் இடமான பூர்வபுண்ணிய ஸ்தான பலம் குறைந்துவிட்டால், குடும்பத்தில் பல குழப்பங்களும், சுபத் தடைகளும் இருந்து கொண்டே இருக்கும். இதற்கு ஒரே பரிகாரம், தென்புலத்தார் மகிழ்ந்து ஆசி தருவதுதான். அதற்கு அவர்களை பூஜிக்க வேண்டும். அப்படி, பூஜைக்கு ஏற்பட்ட வழிதான் இந்த அமாவாசை விரதம். இவர்களை வழிபடும் முறைக்கு பிதுர் தர்ப்பணம் அல்லது சிராத்தம் என்று பெயர். அமாவாசை தினம் பிதுர் கடன் செய்வதால் மூதாதையர், ரிஷிகள், தேவர்களின் ஆசி கிடைக்கின்றது. முன்னோர்களுக்கு அமாவாசை தோறும் திதி கொடுக்க இயலாதவர்கள் கூட வருடத்தில் மூன்று அமாவாசைகளில் அவசியம் திதி கொடுக்க வேண்டும். ஆடி, புரட்டாசி (மஹாளயம்), தை ஆகிய மூன்று அமாவாசைகளில் கண்டிப்பாக நம்முடைய முன்னோர்களுக்கு திதி கொடுக்க வேண்டும்.


ஆடி அமாவாசை அன்று புறப்பட்டு, புரட்டாசி மாதம் மஹாளய அமாவாசை நாளில் பித்ருக்கள் அனைவரும் பூமியில் ஒன்றுசேருகிறார்கள். தை அமாவாசை அன்று நம்முடைய முன்னோர்கள் பித்ருலோகத்துக்குத் திரும்பிச் செல்கின்றனர். அவர்களை மகிழ்ச்சியுடன் வழியனுப்பும் விதமாக தை அமாவாசையன்று நாம் தர்ப்பணம் கொடுக்க வேண்டும். பித்ருக்களுக்கு தேவையான எளிமையான வழிபாடு நடத்துவதன் மூலம் நமக்கு வரும் துன்பங்கள், பிரச்னைகள் தீர்ந்து விடும். அமாவாசை அன்று நாம் கொடுக்கும் தர்ப்பணமே அவர்களை மகிழ்விக்கிறது.


நம் முன்னோருக்குத் தர்ப்பணம் செய்வதால், (எள்ளும் தண்ணீரும் அளிப்பதால்) நமக்கு என்ன பலன் கிடைக்கும் என்பது குறித்து மகாபாரதத்தின் அனுசாசன பர்வம் விளக்குகிறது. பித்ருக்களை நினைத்து நாம் செய்யும் தர்ப்பண பூஜைகள் நமக்குப் பொருளையும், ஆயுளையும், சுவர்க்கப் பேறு முதலான சுப பலன்களையும் கொடுக்கும். நமது குலத்தைத் தழைத்தோங்கச் செய்யும். ஆடி அமாவாசை தினத்தில் அதிகாலையில் நீராடி, முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது அவசியம். அன்று அன்னதானம் செய்வதும் சிறப்பு.


இதன் மூலம் பரம்பரை பரம்பரையாக நமக்கு நன்மைகள் ஏற்படும். பசுக்களுக்கு பழம், அகத்திக்கீரை கொடுப்பது நலம்.

யாவர்க்குமாம் இறைவற்கு ஒரு பச்சிலை

யாவர்க்குமாம் பசுவுக்கு ஒரு வாயுறை

யாவர்க்குமாம் உண்ணும் போதொரு கைப்பிடி

யாவர்க்குமாம் பிறர்க்கு இன்னுரை தானே.

என்பதை இந்த நாளிலாவது அவசியம் கடைப்பிடிக்க வேண்டும்.

பாவங்களில் மகா பாவமாக சொல்லப்படுவது, நம்மைப் பெற்றவர்களையும் நம்முடைய முன்னோர்களையும் அன்புடனும் பொறுப்புடனும் கவனிக்காமல் இருப்பதுதான்.

அவர்கள் உயிருடன் இருக்கும்போது கவனிக்காமல் இருப்பது மகாபாவம் என்றால், அவர்கள் மறைந்த பிறகு அவர்களுக்கு முறைப்படி தர்ப்பணம் கொடுத்து பித்ரு கர்மாவை நிறைவேற்றாமல் இருப்பதும் மகாபாவம் ஆகும்.


யார் யார் இந்த விரதத்தை இருக்கலாம்?


1) தாய், தந்தை இல்லாத ஆண்கள் இந்த விரதத்தை மேற்கொள்ள வேண்டும்.

2) கணவர் இல்லாத பெண்கள் இந்த விரதத்தை மேற்கொள்ள வேண்டும்.

ஒரு ஆணுக்குத் தாய் இல்லாவிட்டாலோ, தந்தை இல்லாவிட்டாலோ அல்லது இருவரும் இல்லை என்றாலோ அவர் அமாவாசை விரதத்தை கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும். தர்ப்பணம் கொடுக்க வேண்டும்.


யார் விரதம் இருக்கக்கூடாது?

1) தாய், தந்தை உள்ளவர்கள் விரதம் இருக்கக்கூடாது.

2) திருமணமான ஒரு பெண்ணுக்கு தாய் அல்லது தந்தை இல்லை என்றாலோ அல்லது இருவரும் இல்லை என்றாலோ, அவர் விரதம் இருக்கக்கூடாது. அவருக்கு கணவர் இருக்கும் நிலையில் அவர் அமாவாசை விரதம் இருக்கக் கூடாது.பெண்ணிற்கு சகோதரர்கள் இருப்பின், அவர்கள் பெண்ணின் பெற்றோருக்கு தர்ப்பணம், விரதம் இருப்பார்கள். அப்பா இல்லை என்றால், அம்மா விரதம் இருப்பார்.அம்மா இல்லை என்றால் அப்பா விரதம் இருப்பார். அப்படி சகோதரர் இல்லை, பெற்றோர் இருவரும் இல்லை என்றால் பெண்கள் கோயிலுக்குச் சென்று தானம் கொடுக்கலாம். யாராவது ஒரு வைதீகருக்கு கொஞ்சம் அரிசி, இரண்டு வாழைக்காய், இயன்ற அளவு தட்சிணை தந்து ஆசி பெறலாம். மற்றவர்களுக்கு உணவளிக்கலாமே தவிர அமாவாசை விரதத்தை பெண் கடைப்பிடிக்கக் கூடாது.


என்ன செய்ய வேண்டும்?

1) உபவாசம் இருக்க வேண்டும்.

2) எள்ளும், தண்ணீரும் இறைத்து முன்னோர்களை வழிபட வேண்டும்.

3) கோயிலுக்குச் சென்று நெய்தீபம் ஏற்றி வழிபடவும்.

4) இயன்றவரை யாருக்காவது உணவு தானம் செய்யுங்கள் அல்லது பசுவிற்கு அகத்திக்கீரை கொடுங்கள்.

அமாவாசை நாளில் பித்ரு தர்ப்பணம் செய்து விட்டு வீட்டில் சமைத்த உணவை காகத்திற்கு வைக்க வேண்டும்.

“தெய்வ பூஜை கூட முன்னோர்கள் பூஜைக்குப் பிறகுதான்” என்று சொல்லப்பட்டதிலிருந்து இந்த வழிபாட்டின் முக்கியத்துவத்தையும் சிறப்பையும் நாம் தெரிந்துகொள்ளலாம். நமக்கு ஆசி வழங்குவதற்காகவே மூதாதையர் பித்ரு லோகத்தில் இருந்து பூலோகம் புறப்படத் தயாராகிறார்கள். அப்படித் தயாராகும் அவர்களை ஆடி அமாவாசை நாளில் வரவேற்க நாமும் தயாராவோம்.


...

/ஆடி அமாவாசை விரதமும் அதன் சிறப்பும்!*


ஜூலை 28 ஆடி அமாவாசை


ஆடி மாதத்தில் (தமிழ் மாதம்) கடக ராசியில் சஞ்சரிக்கும் சூரியன்; சந்திரன், பூமி ஆகிய கிரகங்களுடன் ஒரு நேர் கோட்டில் (0 பாகையில் - சூரியனுக்கும் பூமிக்கும் இடையே சந்திரன்) அமையும் தினமே ஆடி அமாவாசை திதியாக அனுஷ்டிக்கப்படுகிறது. நம்மை நிம்மதியாக வாழ வைக்கும் பித்ரு தர்ப்பணம் ஒரு ஜாதகத்தில் பூர்வபுண்ணிய ஸ்தான பலம் குறைந்தவருக்கு சுகமாக வாழ துணைபுரிவது தெய்வாம்சம் பொருந்திய முன்னோர்கள் தான்.


இவர்களை வழிபடும் முறைக்கு பிதுர் தர்ப்பணம் அல்லது சிரார்த்தம் என்று பெயர். இறை விருப்பப்படி மானிடருக்கு ஆசி கூறி இல்லறத்தை நல்லறமாக்கி நல்வாழ்வுக்கு வழிகாட்டும் அதிகாரம் படைத்தவர்கள் தேவர்களும், பித்ருக்களுமே! அமாவாசை தினம் பிதுர் கடன் செய்வதால் மூதாதையர், ரிஷிகள், தேவர்களின் ஆசி கிடைக்கின்றது என்பது ஐதீகம்.


நமது முன்னோர்களில் ஒருவர் இறந்த திதி, பட்சம், தமிழ்மாதம் அறிந்து, ஒவ்வொரு தமிழ்வருடமும் அதே திதியன்று (ஆங்கிலத் தேதிக்கு ஒவ்வொரு ஆண்டும் மாறிவரும்) குடும்பத்தார்கள் பிண்டம் செய்து வைத்து படைப்பதே சிரார்த்தமாகும். இதனால் குடும்பத்தில் சகல தோஷங்களும் நிவர்த்தியாகின்றன. இந்த தர்ப்பணத்தை இதேபோல அமாவாசைத் திதிகளிலும்செய்து வந்தால் மிகப்பெரும் நன்மைகள் உண்டாகும்.


ஒருவேளை முன்னோர்களின் இறந்தத் திதி தெரியாதவர்கள், ஆடி அமாவாசை அல்லது தை அமாவாசையன்று இராமேஸ்வரம் அல்லது சொந்த ஊரில் உள்ள ஏதாவது ஒரு கோயிலில் அல்லது வீட்டிலேயே சிரார்த்தம் செய்வது நன்று. அதுவும் முடியாதவர்கள் ஏதாவது ஒரு அமாவாசையன்று (ஆண்டுக்கு ஒரு அமாவாசை என நமது ஆயுள் முழுவதும்) செய்து வருவது மிகவும் நன்மையளையும், அளப்பரிய நற்புண்ணியங்களையும் தரும்.


சாதாரணமான அமாவாசையானது அனுஷம், விசாகம், சுவாதி நட்சத்திரங்களில் வருமானால் அப்போது செய்கிற சிரார்த்தம் ஒரு வருடத்துக்குரிய திருப்தியை உண்டாக்குகிறது. திருவாதிரை, புனர்பூசம், பூசம் நட்சத்திரங்களில் வரும் அமாவாசையன்று செய்யப்படும் பிதுர்தர்ப்பணம் பன்னிரெண்டு ஆண்டுகள் பிதுர்திருப்தி ஏற்படுத்தும். அவிட்டம், சதயம், பூரட்டாதி நட்சத்திரங்களில் வரும் அமாவாசையன்று செய்யப்படும் பித்ருபூஜையானது, பித்ருக்களுக்கு, தேவர்களுக்கும் கிடைக்காத புண்ணிய காலத்தைத் தரும்.


மாசி மாதத்து அமாவாசையானது சதய நட்சத்திரத்தன்று வருமானால், அது பித்ருக்களுக்கு மிகவும் திருப்தியை அளிக்கக்கூடிய காலமாகும். மாசி மாத அமாவாசை, அவிட்டம் நட்சத்திரத்தில் வருமானால், அதுவும் பித்ருக்களுக்கு அளவற்ற மனமகிழ்ச்சியைத்தரும். மாசி மாதம் அமாவாசை அவிட்டம் நட்சத்திரம் வரும் நாளில் பித்ருக்களை நினைத்து அன்னம் அல்லது தண்ணீர் தானம் செய்தால் பதினாயிரம் ஆண்டுகள் பிதுர்களைத் திருப்தி செய்த பலன் கிடைக்கும். மாசி மாதத்தில் வரும் அமாவாசை, பூரட்டாதி நட்சத்திரத்தில் வந்து, அப்போது அந்த நன்னாளில் சிரார்த்தம் செய்தால், பித்ருக்கள் திருப்தி அடைந்து ஆயிரம்யுகங்கள் சுகமாக தூங்குவார்கள்.


திதிகள் தோன்றுவதற்கான காரணம் வானவியல் கணிப்பின்படி, பூமியை சந்திரன் சுற்றி வருவதும், பூமியும் சந்திரனும் இணைந்து சூரியனை வலமாக சுற்றி வருவதும் நிரூபிக்கப்பட்ட உண்மைகள். பூமி தன்னைத்தானே சுற்றுவதால் பூமியில் இரவு, பகல் ஏற்படுகின்றன. அத்துடன் தன்னைத் தானே சுற்றும் பூமி, சூரியனையும் சுற்றி வருவதானது நாமும் உறுண்டு கொண்டு ஆலயத்தைச் சுற்றி அங்கப் பிரதிஷ்டை செய்வது போன்ற நிகழ்வாகும்.


சந்திரன் பூமியை வலம் வருவதோடு, பூமியுடன் இணைந்து சூரியனையும் சுற்றி வருகின்றமையால் பூமியில் திதிகள் தோன்றுகின்றன. பூமி தனது அச்சில் 231/2 பாகை சரிவாகச் சுற்றுவதனால் பருவகாலங்கள் உண்டாகின்றன. அமாவாசை தினத்தில் தந்தையை இழந்தவர்களும், பூரணை தினத்தில் அன்னையை இழந்தவர்களும் வழிபடுவது புராதன காலம் தொட்டு பின்பற்றிவரும் ஒரு வழக்கமாகும்.


அமாவாசைத் திதி, மாதா மாதம் நிகழ்ந்தாலும், அவற்றுள் தைமாதத்திலும், ஆடி மாதத்திலும்  வரும் அமாவாசைத் திதிக்கு அதிக சிறப்பு உண்டு. பிதுர் தேவர்களை சிரத்தையோடு வழிபாடு செய்து சிரார்த்தம் செய்வதால் பிதுர்கள் தோஷங்களில் இருந்து தோஷ நிவர்த்தி பெறலாம்.


அமாவாசை, பெளர்ணமி ஆகிய இரண்டு விரதங்களும் முறையே காலமான தந்தை, தாய் ஆகியோரைக் குறித்து அவர்களின் (சந்ததியினரால்) பிள்ளைகளால் அனுஷ்டிக்கப்படும் விரதங்கள் ஆகும். ஒவ்வொரு மாதத்திலும் இந்த விரதங்களுக்குரிய தினங்கள் வருகின்றன. இவ்விரதங்களை அனுஷ்டிப்பவர்கள் உபவாசம் இருக்கவேண்டும். அவ்வாறு இருக்க இயலாதவர்கள், ஒரு பொழுது உண்டு அனுஷ்டிக்கலாம்.


இத்தினத்தில், புண்ணியத் தீர்த்தங்களில் நீராடித் தூய்மையாராய் பிதுர் தர்ப்பணம் செய்தும் பிண்டதானம், சிரார்த்தம் செய்தும் இறைவனை வழிபட்டும் அந்தணர்களுக்குத் தானமும், விருந்தினர், சுற்றந்தார், ஏழைகள், ஆதரவற்றோர் ஆகியோருக்கு உணவளித்தும், அவர்களுடன் போசனம் செய்து விரதக் கொள்கையுடன் இருப்பர்.


இரு வேறு சக்திகளான சூரியன், சந்திரன் ஒன்றாக இணையக் கூடிய நாளே அமாவாசையாக கருதப்படுகிறது. எல்லா திதியிலும், ஏதாவது ஒரு கிரகம் திதி தோஷம் (வலு

விழப்பது) அடையும். ஆனால், அமாவாசை தினத்தன்று எந்தக் கிரகமும் திதி தோஷம் பெறுவதில்லை. எந்த ஒரு பரிகாரமாக இருந்தாலும், அமாவாசையன்று செய்தால் அதற்கு சிறப்பான பலன்கள் கிடைக்கும். ராகு - கேது பரிகாரம், சர்ப்பதோஷம், சனி, செவ்வாய் கிரகங்களால் ஏற்படக்கூடிய பிரச்னைகள், களத்திர தோஷம், மாங்கல்ய தோஷம் என அனைத்து தோஷங்களுக்கும், அமாவாசை திதியன்று பரிகாரம் செய்வது நல்லது.


மனிதப் பிறவி மகத்தான பிறவி. மனிதனாகப் பிறந்தால்தான், இறைவனை எளிதில் அடைய முடியும். வேறு எந்தப் பிறவிக்கும், இந்த சிறப்பு கிடையாது. வானுலகில் தேவராக இருந்தாலும் கூட, இறைவனைத் தரிசிக்கத்தான் முடியுமே தவிர, அவரோடு இரண்டறக் கலக்க முடியாது....

தமிழகம்ஆடி அமாவாசை : ஆறுகள், கடல்களில் பக்தர்கள் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம்*


சென்னை : ஆடி அமாவாசையையொட்டி ஆறுகள் மற்றும் கடல்களில் பக்தர்கள் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.குமரி முக்கடல் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம், தாமிரபரணி ஆற்றில் ஏராளமானோர் புனித நீராடினர்.



Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,