தோசை கல்லில் விடாப்பிடி துருவா..? பளபளன்னு சுத்தம் செய்

 


தோசை கல்லில் விடாப்பிடி துருவா..? பளபளன்னு சுத்தம் செய்ய இந்த ஒரு பொருள் போதும்..ருசியான மொறுமொறு தோசை சுடலாம்

பொதுவாக இரும்பு கடாய், இரும்பு தோசைக்கல் போன்ற  இரும்பு சார்ந்த பாத்திரங்கள் அடிக்கடி தண்ணீரில் கழுவுவதால் ரொம்ப எளிதாக துருப்பிடிக்க ஆரம்பித்து விடும். இதை நீண்ட நாட்கள் அப்படியே கிடப்பில் போட்டு வைத்து விட்டால் ரொம்பவும் மோசமாக துருப்பிடித்திருக்கும். உடனே அதனை அப்புற படுத்திவிட்டு எளிமையாக பயன்படுத்த கூடிய நான்ஸ்டிக் தவா வாங்குவீர்கள். என்றைக்காவது யோசித்தது உண்டா? இதுவரை எத்தனை தவாவை வாங்கி இருப்பீர்கள், எத்தனை தவாவை தூக்கி எறிந்து இருப்பீர்கள்.  ஆனால் இரும்பு தோசை கல் எவ்வளவு காலம் ஆனாலும் சரி, வருடம் ஆனாலும் சரி அப்படியே இருக்கு

இரும்பு தோசை கல்லில் தோசை சுடுவது உடல் ஆரோக்கியத்திற்கு சிறந்த ஒன்றாகும். எனவே, இரும்பு தோசை கல்லை எப்படி பராமரிப்பது? புதியதாக இரும்பு தோசைக்கல் வாங்கினால், அதை ஒரே நாளில் துரு நீக்கி, சுத்தம் செய்வது எப்படி? உங்கள் வீட்டில் நீண்ட நாள் பழைய இரும்பு தோசைக்கல் அதிகமாக துருப்பிடித்து, கருப்பு பிடித்திருந்தால், அதை சுத்தம் செய்வது எப்படி? என்பதற்கான சுலபமான வழிமுறைகளை தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள இருக்கிறோம்.

1. முதலில், துருப்பிடித்த அந்தக் கல்லை, எடுத்து அடுப்பின் மீது வைத்து நன்றாகக் காயவிடுங்கள். அதிலிருந்து அப்படியே புகை கிளம்பும், அவ் அளவிற்கு காய வைக்க வேண்டும்.  இடுக்கியோ, பிடி துணியோ, கட்டாயம் கையில் இருக்க வேண்டும்.

2. தோசை கல் நன்கு காய்ந்ததும் குறைந்த தீயில் அடுப்பை மாற்றிக் கொள்ளுங்கள். பின்னர் ஒரு கைப்பிடி நிறைய கல் உப்பை எடுத்து அதன் மீது தூவுங்கள். பின்னர் ஒரு மூடி எலுமிச்சை பழத்தை முழுதாக பிழிந்து கொள்ளுங்கள்


3. பிறகு அந்த எலுமிச்சை பிழிந்த மூடியை வைத்தே  5 லிருந்து 10 நிமிடம் வரை துரு இருக்கும் இடங்களில் நன்கு பரபரவென்று தேயுங்கள். அடுப்பின் சூட்டிலேயே உப்பை வைத்து எலுமிச்சை சாறுடன் தேய்ப்பதால் துரு கரை முழுவதுமாக நீங்கிவிடும்.

4. பின்னர் அடுப்பை அணைத்து விட்டு தோசை கல்லை கீழே திருப்பி போட்டு, பின்புறமும் இதே போல உப்பை தூவி எலுமிச்சை சாறு ஊற்றி நன்கு தேய்த்து கொள்ளுங்கள். அதன் பிறகு தோசை கல்லை  இரும்பு நார் கொண்டு நன்கு தேய்த்து தண்ணீரில் நன்கு ஒரு முறை கழுவி கொள்ளுங்கள்.


          



Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,