இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முத்த தலைவரும் ஆன தோழர் டி ஞானையா நினைவு நாள்.
இந்திய தபால் தந்தி தொழிற்சங்க இயக்கத்தின் (NFPTE ) முன்னாள் மாபொது செயலாளரும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முத்த தலைவரும் ஆன தோழர் டி ஞானையா நினைவு நாள். - ஜூலை 8 , 2017 . அன்னாருக்கு நமது நினைவார்ந்த அஞ்சலிகள் ! அஞ்சல்துறை தந்த அரியதோர் முத்து.தோழர் டி. ஞானையா 07.01.1921 ல் மதுரை திருமங்கலம் அருகிலுள்ள நடுக்கோட்டையில் பிறந்தார் .1941 அக்டோபரில் அஞ்சல் எழுத்தராக கரூரில் சேர்ந்தார் . .1942 முதல் 1946 வரை இராணுவ அஞ்சல் சேவையில் சேர்ந்து பர்மா லிபியா சைப்ரஸ் கராச்சி ஆகிய இடங்களில் பணியாற்றினார் .
திருச்சியில் பணியாற்றிபோது தபால் தந்தி தொழிற்சங்கத்தில் தீவிரமாக் ஈடுபட ஆரம்பித்தார் . உதவிக் கோட்ட செயலரில் ஆரம்பித்து படிப்படியாக உயர்ந்து NFPTE செயலராக 1963 லும், NEPTE மாபொதுச் செயலராக ( Secretary General ) 1965 லும் தேர்ந்தெடுக்கப்பட்டார் .1965 முதல் 1960 வரையிலும் மற்றும் & 1976 முதல் 1978 வரையிலும் NEPTE யின் Secretary General ஆக இருந்தார்.அவர் ஒரு சிறந்த மார்க்சிய பேரறிஞர்.
மார்க்சியம் குறித்தான பல வரலாற்று ஆய்வு நூல்களை எழுதியுள்ளார்
Comments