ராஜீவ் காந்தியின் 78ஆவது பிறந்த தினம்

 


ராஜீவ் காந்தியின் 78ஆவது பிறந்த தினத்தையொட்டி டெல்லியில் உள்ள நினைவிடத்தில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி ஆகியோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 78ஆவது பிறந்த நாள் விழா இன்று நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், டெல்லி வீர் பூமியில் உள்ள ராஜீவ் காந்தியின் நினைவிடத்தில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
அவர்களைத் தொடர்ந்து காங்கிரஸ் தொண்டர்களும் ராஜீவ் காந்திக்கு மரியாதை செலுத்தினர்.
முன்னதாக காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தனது சோசியல் மீடியா பக்கத்தில், ' அப்பா, ஒவ்வொரு நொடியும் என்னுடன், என் இதயத்தில் நீங்கள் இருக்கிறீர்கள். நாட்டிற்காக நீங்கள் கண்ட கனவை நிறைவேற்ற நான் எப்போதும் முயற்சிப்பேன்' என்று பதிவிட்டு ராஜீவ் காந்தி குறித்த ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்.

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,