ஆவணி மாத சிறப்புகள்
ஆவணி மாத சிறப்புகள்
ஆவணி மாதத்தில், பௌர்ணமி ஷ்ரவண நட்சத்திர (திருவோணம்) நாளில் தோன்றும். இது, விஷ்ணுவின் ஜனன கால நட்சத்திரமாகும்.வேத ஜோதிட நாட்காட்டி, பஞ்சாங்கத்தின் படி, ஆவணி மாதம் மிகவும் சுபத்தன்மை நிறைந்த மாதம்.
இந்த மாதம் முழுவதும் சிவ பெருமானை வணங்கி, வழிபடுவதற்காக, ஆசீர்வாதத்தைப் பெறுவதற்கு ஏற்ற மாதம். ஆயிரக்கணக்கான பக்தர்கள், இந்த மாதம் முழுவதும் விரதமிருந்து, தினமும் சிவலிங்கத்திற்கு பூஜை செய்கின்றனர். சிவபெருமானின் ஆசீர்வாதத்தைப் பெறுவதற்காக, கூடுதலாக, பல பூஜைகளையும், பிரார்த்தனைகளையும், வழிபாடுகளையும் செய்கின்றனர்.ஆவணி மாத திங்கட்கிழமை எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது
ஆவணி மாதத்தில், பௌர்ணமி ஷ்ரவண நட்சத்திர (திருவோணம்) நாளில் தோன்றும். இது, விஷ்ணுவின் ஜனன கால நட்சத்திரமாகும். அல்லது, ஒவ்வொரு ஆண்டும் பௌர்ணமி நாளும், திருவோண நட்சத்திரமும் ஒன்றிணைந்து வரும். அதனாலேயே, இது ஆவணி / ஷ்ரவண மாதம் என்று அழைக்கப்படுகிறது. இந்த மாதத்தின் ஒவ்வொரு திங்களும், மிகவும் சுபத்துவம் வாய்ந்தது. சிவன் கோவில்களில், ஆவணி மாதத்தின் ஒவ்வொரு திங்கைகிழமை அன்றும் சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன. சிவலிங்கத்திற்கு இரவும், பகலும் தொடர்ந்து நீர் மற்றும் பால் அபிஷேகம் செய்யப்படும். அது மட்டுமின்றி ஆவணி முழுவதும், ஒவ்வொரு திங்களன்றும் வில்வ இலைகள், சிவபக்தர்கள் புனித நீர், பால் மற்றும் பூக்களால் அர்ச்சிக்கின்றனர். பக்தர்களும் காலை முதல் இரவு வரை விரதமிருந்து, இரவு முழுவதும் எரியும் வகையில் ஒற்றை அகல் விளக்கை ஏற்றுவார்.
Comments