மழைக்கும் கண்ணாடிக்குமான ஒப்பந்தத்தில்


மழைக்கும் கண்ணாடிக்குமான  ஒப்பந்தத்தில்

கண்ணாடி சன்னலில்
படிந்த அழுக்குக் கறையை
அழித்துக் கொண்டே
உருண்டன அத்துளிகள்.
அதுவரை என் கண்களில்
பளிச்சிடாத பசுமரக் கூட்டம்
என் கண்களையே
குறை கூறிக் கறுத்த
அவ்வெண் மேகக் கூட்டம்
என எல்லா காட்சிகளும்
மாசில்லா சாட்சிகளாய்
கையொப்பம் வடித்தன
மழைக்கும் கண்ணாடிக்குமான
ஒரு கோடைக்கால
பரஸ்பர ஒப்பந்தத்தில்!

















-தீபா ஶ்ரீதரன்.

Comments

Popular posts from this blog

:இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலான பெண்களுக்கு மாதவிடாய் கோளாறுகள்? வாழ்வியல் முறையை மாற்றுங்கள்!

அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவ கல்லூரி