“மலர்களை விட எனக்கு முட்களைப் பிடிக்கும் ரத்த சம்பந்தம் கொள்வதால்” – அப்துல் ரகுமான்.

 


“மலர்களை விட எனக்கு முட்களைப் பிடிக்கும் ரத்த சம்பந்தம் கொள்வதால்” – அப்துல் ரகுமான்.

உடலமைப்பு, முக ஜாடை சில சமயம் குரல் கூட தந்தை மாதிரியே பிள்ளைக்கு வாய்க்கலாம். நுட்பமான கவி மனம்கூட அதேமாதிரி பரம்பரை பரம்பரையாகத் தொடருமா?

ஆச்சரியம் தான். ஆனால் அப்துல் ரகுமானுக்கு அதிலும் ஒரு தொடர்ச்சி. தாத்தா, அப்பா எல்லாம் கவிஞர்கள். மகனும் அந்த மரபில் தொடர்ந்து கவிஞன்.

மதுரையில் வைகை ஆற்றங்கரையை ஒட்டியுள்ள சந்தைப் பேட்டையில் காதர்கான் பட்லர் சந்தில் உள்ள சையது முகமதுவின் வீடு ஐம்பது வருடங்களுக்கு முன்பே பிரபலம். ஆற்காடு நவாப் வழி வந்த அந்தக் குடும்பத்தில் கல்விதான் குடும்பச் சொத்து.

சையது முகமதுவின் அப்பா சையது அஷ்ரப் அரபிமொழிக் கவிஞர். அவருடைய அப்பாவும் அரபி, உருது மொழிக் கவிஞர். பாரசீகம், உருது, அரபி மொழிகள் சர்வசாதாரணமாகப் புழங்கிய அந்த நடுத்தர வர்க்கத்துக் குடும்பத்தில் தலைப்பிள்ளை அப்துல் ரகுமான்.

“எங்க அப்பா டிராவல்ஸ் ஏஜெண்டாக வேலை பார்த்துக்கிட்டே நிறைய புத்தகங்கள் எழுதியிருக்கிறார். அப்பாவோட வருமானமும் அதிகம் என்று சொல்ல முடியாது. அதை வைத்துத்தான் குடும்பம் நடந்தது.

அண்ணன் ரகுமான் மூத்த பிள்ளை. அடுத்து என்னையும் சேர்த்து இரண்டு தம்பிகள், ஒரு சகோதரி. அண்ணனுக்குச் சின்ன வயதிலிருந்தே படிப்பில் நல்ல ஆர்வம். அப்போதே அரபு மொழியைக் கத்துக்கிட்டு சிறு வயதிலேயே குர்ஆனைப் படிச்சி முடிச்சிட்டார்.

அதிகம் யாரோடும் பேசாமல் தனிமையை விரும்புகிறவராக இருந்தார்” – தனது அண்ணனைப் பற்றி பாசத்துடன் சொல்கிறார் மதுரையில் இருக்கும் ரகுமானின் தம்பி அப்துல் ரஷீத்.

நன்றி: தாய்

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,