அக்டோபர் 25 ஆம் தேதி சர்வதேச கலைஞர்கள் தினம்..


 #InternationalArtistsDay

அக்டோபர் 25 ஆம் தேதி சர்வதேச கலைஞர்கள் தினம்..
‘’கலைஞர்’’ என்ற வார்த்தை …
ஓவியர்கள், சிற்பிகள், இசைக்கலைஞர்கள், நடனக் கலைஞர்கள், எழுத்தாளர்கள், கவிஞர்கள், புகைப்படக்காரர்கள், நடிகர்கள், டிஜிட்டல் கலைஞர்கள் …..மற்றும் பல கலைகளை உள்ளடக்கியது.
‘’படைப்பாற்றல்’’ என்பது நாம் பிறக்கும்போதே ​​இயற்கை நமக்குத் தந்த கொடை…அது நாம் வகுத்துள்ள நிலவியல்..ஜாதி.. மதம்.. கடந்த எல்லைகளுக்கு அப்பாற்பட்டது.
கலைஞர்கள் தங்கள் படைப்புகளை உருவாக்க கடினமாக உழைக்கிறார்கள். அவை நம்மைச் சுற்றியுள்ள உலகத்திற்கு அழகு சேர்க்கின்றன. கற்கால மனிதர்கள் -குகைகளில் ஓவியம் வரையத் தொடங்கிய காலத்திலிருந்தே, கலை முக்கியமான நிகழ்வுகளின் பதிவுகளை வைத்திருக்கிறது.
கலை கடந்த காலத்துடன் தொடர்பை வழங்குகிறது.
கலைஞர்கள் நம் வரலாற்றை, அழியாமல் பதிவு செய்து உண்மைகளை வெளிக்கொணருகிறார்கள்…!
கதைகள் மற்றும் மரபுகளை கடந்து செல்லும் கலைஞர்கள், தங்களைச் சுற்றியுள்ள மக்களுடன் இணைவதற்கு ஒரு தனித்துவமான வழியைக் கொண்டுள்ளனர்.
கலைகளின் வழியாக வரலாற்றை விதைத்து செல்லும் அவர்களின் பங்களிப்பு முக்கியமானதாகிறது…!
சர்வதேச கலைஞர்கள் தின வரலாறு..
அக்டோபர் 25, 1881 -
உலகப் புகழ் பெற்ற ஸ்பானிஷ் கலைஞரான ‘’பாப்லோ பிக்காசோ’’ வின் பிறந்த நாளாகும்..!
Canadian artist, Chris MacClure.என்பவர்
2004 ஆம் ஆண்டு .. இன்றைய தினத்தை ‘’சர்வதேச கலைஞர்கள் தினமாக’’தொடங்கினார்.
உலகிலுள்ள கலைஞர்கள் சமூகத்திற்கு வழங்கிய அனைத்து பங்களிப்புகளையும் ..இந் நாளில்
#Histartica வாழ்த்திக் கெளரவிக்கிறது…

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,