பூமணி உங்களுக்கு உற்சாகம் அளித்தாரா?

 


நீங்கள் எழுத வந்த பின்னணி பற்றிக் கூறுங்கள்...

என்னுடைய அப்பா ஒரு ஒயில் கும்மிக் கலைஞன். நான் சிறு பையனாக இருந்தபோது என்னை உட்காரவைத்துவிட்டு என்னிடம் ஆடிக் காண்பிப்பார். ஒரே நேரத்தில் காட்சியும் கானமும் காணக் கிடைத்தன. இதுமாதிரியான வாய்ப்பு எல்லோருக்கும் கிடைக்கும் எனச் சொல்ல முடியாது. எனக்கு இந்த வாய்ப்பு என்னுடைய 12 வயதுவரை கிடைத்தது. இப்போது நினைக்கும்போது இதுதான் என் வாசிப்பிற்கான காரணமாக இருக்கும் என நினைக்கிறேன். முதலில் எல்லோரையும்போல சிந்துபாத்திலிருந்துதான் தொடங்கினேன். அண்ணாதுரை, மதியழகன், நெடுஞ்செழியன், ஆசைத்தம்பி போன்றோரை வாசித்தேன். தொடக்கத்தில் திரவிடக் கட்சியில் எல்லோருமே எழுத்தாளர்களாக இருந்தார்கள். இந்தத் திராவிட எழுத்தாளர்களை வாசித்தது ஒருவிதமான புதிய ரசனையைக் கொடுத்தது. இது இலக்கிய வாசிப்புக்கான வாசலாக இருந்தது எனலாம். அதன் பிறகு ஜெயகாந்தன், சுஜாதா போன்றவர்களை வாசிக்கத் தொடங்கினேன். ரசனை மாறுகிறது. ரஷ்ய இலக்கியங்களையும் தேடி அடைகிறேன். எழுத்தாளர் பூமணி என்னுடைய தாய்மாமன் என்பதால் அவருடைய வீட்டில் நான் கேட்டிராத இதழ்களையும், புத்தங்களையும் பார்க்கிறேன். கரிசல் எழுத்தாளர்களின் கதைகள் வாசிக்கக் கிடைத்தன. அந்தக் கதைகள் என் பிரதேத்துக் கதைகளாக, நான் எழுத நினைத்த கதைகளாக இருந்ததால் என்னாலும் எழுத முடியும் என்னும் தைரியம் வந்தது. நானும் எழுதினேன். ஆனால் அப்போது என் கதைகள் அவர்களின் கதைகளைப் பிரதி எடுத்தது போலதான் இருந்தன.
பூமணி உங்களுக்கு உற்சாகம் அளித்தாரா? உங்கள் இருவருக்குமான உறவு எப்படி இருந்தது?
இல்லை. அவர் என்னை எழுதச் சொல்லி உற்சாகம் அளிக்கவில்லை. நாங்கள் இருவரும் இலக்கியம் குறித்தெல்லாம் உரையாடிக்கொண்டிருக்க மாட்டோம். அவருக்கு நான் ஏகலைவன்போலதான். நாங்கள் மருமகன்கள் மட்டும் 16பேர் இருப்போம். அவர் எங்களுக்கெல்லாம் தாய்மாமன் என்பதால் நாங்கள் அவர் முன்னாடி நின்றெல்லாம் பேச மாட்டோம். நான் மட்டும் கொஞ்சம் பேசுவேன். புத்தகம் கொடுப்பார். “படிச்சியா? நல்லாருக்கா” என்று கேட்பார். நானும் “ஆமா. படிச்சேன். நல்லாருக்கு” என்பேன். அவ்வளவுதான்.
- சோ.தர்மன் நேர்காணல்
நன்றி; இந்து தமிழ் திசை

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,