தீபத்திருநாள் நல்வாழ்த்துக்கள்

 


தீபத்திருநாள் நல்வாழ்த்துக்கள்...
🪔🙏💐🎁🎂💓💖💝🎊❣️🪔

வளைந்து நெளிந்து
அபிநயம் காட்டி
காற்றின் கொன்னக்கோளுக்கு ஏற்றபடி 
நடனமிடம் தீபமே 
ஆதி நர்த்தகியே 
உன்னை வணங்குகிறேன்.

🪔
விளக்கில் வசிக்கும் தேவதைகள் காத்திருப்பது
விளக்கேற்றும் தேவதையின் வருகைக்காக.

🪔
கூர்ந்து கவனி 
தீபம் பேசுகிறது.

🪔
தீயின் புன்னகை
தீபம்.

🪔
திரி காம்பு
சுடர் மொட்டு.

🪔
வெளியே எத்தனை
விளக்குகள் எரிந்தாலும்
உன்னைப் பிரகாசமாக்குவது
உனக்குள் எரியும் சுடர்தான்.

🪔
ஒரு விதைக்குள் 
எத்தனை மரங்களோ
ஒரு சுடருக்குள் எத்தனை விளக்குகளோ?

🪔
ஒளி இல்லாமல் 
ஒளிவட்டம் இல்லை.

🪔
உன் வானில் 
நீயே கிழக்கு
உன் பாதைக்கு
நீயே விளக்கு.

🪔
நீ விளக்கென்றால்
இன்னொரு விளக்கை
ஏற்றி வை.

🪔
ஊனுடம்பு அகல்
எண்ணெய் குருதி
நாடி நரம்பாகும் திரி
மூன்றையும் வசமாக்கி 
ஆடிக் களித்து
நின்று ஒளிரும் அறிவே சுடர்.

🪔
விளக்கில் படி
விளக்கையும் படி 
விளக்காக வேண்டும் நீ.

🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔

இனிய தீபத்திருநாள் வாழ்த்துக்கள்! அனைவரது இல்லங்களிலும் உள்ளங்களிலும் அன்பின் ஒளி பரவட்டும்... மகிழ்ச்சியும் இனிமையும் எங்கும் நிறையட்டும்!
🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔💝
( கவிதைகள் என் 'இருளும் ஒளியும்' நூலில் ஒளி எனும் தலைப்பில் இருப்பவை )
*
அன்புடன்

பிருந்தா சாரதி


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,