ஈசனே ஏழுமலை வாசனே

 


ஈசனே ஏழுமலை வாசனே

ஈடில்லா திருமலை நாதனே !
குபேரனுக்காக அன்று கடன்பட்டாய்
திருமகள் அகன்று துயருற்றாய் !
வகுளாதேவியின் திருமகனானாய் !
எமக்காக நிரந்தர திருவுருவானாய் !
எத்திசையில் நாம் வாழ்ந்தாலும் துயர் தீருமே
உன் திசை வணங்கி கோவிந்தா என்றதுமே !
கலியுக தெய்வம் நீ
தவறிழைத்தால் தடுக்கவும் செய்வாய் ! கருணைப்பார்வையால் தாங்கியும் பிடிப்பாய்!
உன் அருளன்றி இங்கு எவ்வித அசைவுமில்லை!
உன் வரமின்றி வாழ்வில் வசந்தமும் இல்லை!
பக்தருக்காய் ஓய்வின்றி சேவைசாதிக்கிறாய் !
பதமலர் பற்றிட
படியாக பிறப்பெடுக்கவும் யாமறியோம்!
பரம்பொருளே நாடகமாய் உன் லீலைகள்
பதி உன் நாமமே கரைத்திடும் எம் கவலைகள் !
யாதுமே நீயல்லவா!
யாவருக்கும் நீ அருளவேண்டியது நின் கொடையல்லவா!
கட்டண தரிசனமும் மாறிடுமோ !
ஏங்கிடவே தரிசனமும் கிட்டுடுமோ !
பிணியறுந்திடுமோ பிறவிக்கடல் கடந்திட ! 😥
என்று தீருமோ கண்ணார கண்டிட ஏக்கம்
எப்போதும் சிந்தையில் வைத்திடு உன் திரு நாமம் !
உனைச்சேரும் காலம்கண்டே கழிந்திடுமோ பிறவிகள்!
உன்னருள் அன்றியே அவையும் அறுந்திடுமோ!
நின் தாள் வணங்கியே நின்றிடுவோம் சேயாய்!
அன்னையாய், அருட்கடலாய் அரவணைத்து காத்திடுவாயே !



Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,