உவமைக் கவிஞர் சுரதா 102 வது பிறந்த நாள்

 உவமைக் கவிஞர் சுரதா 102 வது பிறந்த நாள் 

*


சுடரும் சொற்கள்

'சுரதா'வுடையவை.


ஒளிவீசும் உவமை

ஒவ்வொன்றும் 

ஒரு நட்சத்திரம்.


உவமைக் கவிஞருக்கு உவமை கூற உவமை ஒன்றில்லை. 


சிந்தனையின் வேகத்தில்

சிறகடிக்கும் புயல் பறவை.


பந்தயக்

குதிரையின் பாய்ச்சல்தான் 

சீறி வரும் சந்த நயம்.


மரபோடு புதுமைகளை

மணிமணியாய்க் கோர்த்தார்


அணிகலனாய் அதைச் சூட்டி 

தமிழை அழகு பார்த்தார்.


*

அவரது பாடல்களில் ஒன்று: 


"கண்ணில் வந்து

மின்னல் போல் காணுதே

இன்ப காவிய கலையே ஓவியமே


சுடர் மின்னல் கண்டு

தாழை மலருவது போலே

உனை கண்டு உள்ளமே மகிழ்ந்தேனே


நீல வானம் இல்லாத

ஊரே இல்லை

உலகினில் மழை இன்றி

ஏதும் இல்லை

அமுதே உனை அன்றி

வாழ்வே இல்லை"


 *

அவர் எழுதிய வசனம் ஒன்று:


"ஒரு நாட்டை மகுடங்கள் ஆட்சி செய்யக்கூடாது

மக்களின் எண்ணங்கள்தான் ஆள வேண்டும்"


படம்: மங்கையர்க்கரசி

*

உவமைக் கவிஞர் #சுரதா அவர்களின் 102 வது பிறந்த நாளில் அவர் நினைவைப் போற்றுவோம்.

*

 பிருந்தா சாரதி


*

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,