ஆளாகி நிற்கும் விழுதுகள்/சுமிதா ரமேஷ்

 


ஆளாகி நிற்கும் விழுதுகள்

                                                                ----கவிதை 

ஆல் போன்ற  குடும்பங்கள் நிலைக்க 

ஆளாகி நிற்கும் விழுதுகள் இவர்கள் ..



பெண்மை சிறக்கவும் 

இல்லறம் சிரிக்கவும்  காரணம் இவர்கள்..! 


மகன் சகோதரன் தந்தை என

 பெயர்கள் மட்டும் மாறும்...

அவர்கள் 

சந்தோஷசிரிப்பினுடே  

சிறு  தியாகமும் 

சத்தமின்றியே உலவிடும்....! 


அழுது புலம்பிட அனுமதியா சமூகம் 

ஆற்றலையும் மட்டும்  சொல்லிடும்

அது அவன்  கடமையென .


தாயும் ஆவார்  பிள்ளைப்பெறாமலே!  

தனயனும் ஆவார்   கூடப்பிறக்காமலே!


சமூகத்தின் அச்சாணி ஆண்கள் ! 

சாத்திரங்களின் நாயகர்கள் ..


சிந்தனைகளின் பிறப்பிடம் சீர்திருத்தவாதிகள் 

சிறப்பாய் இவர்களை 

வாழ்த்திட ஒரு நாள் போதுமா...


ஆண்கள் தின வாழ்த்துக்கள் !! 💐


Happy international men's day 💐




Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,