*கார்த்திகை ஞாயிறு... விரதம் இருந்து விஷ்ணுவை வழிபாடு செய்தால்

*கார்த்திகை ஞாயிறு... விரதம் இருந்து விஷ்ணுவை வழிபாடு செய்தால்*



கார்த்திகை மாதம் துவாதசி நாளில், துளசி தேவி மகா விஷ்ணுவைத் திருமணம் செய்து கொண்டதாக ஐதீகம். எனவே, கார்த்திகை மாதம் முழுவதும் விரதம் இருந்து துளசி தளைகளால் மகா விஷ்ணுவை அர்ச்சனை செய்து வழிபட்டு வந்தால், ஒவ்வொரு துளசி தளைக்கும் ஒவ்வொரு அஸ்வமேதயாகம் செய்த பலன் உண்டு என்பர். துளசி மாலை அணிபவர்களிடம், மகாலட்சுமி எப்போதும் வாசம் செய்வாள் என்று சாஸ்திரம் அறிவுறுத்துகிறது.


கார்த்திகை மாத துவாதசி நாளில், ஏழைகளுக்கு அன்னதானம் செய்தால், கங்கைக் கரையில் ஆயிரம் பேருக்கு அன்னமிட்ட பலன் கிடைக்கும். மகாவிஷ்ணுவை கஸ்தூரியால் அலங்கரித்து, தாமரை மலர்களால் அர்ச்சனை செய்து வழிபட்டால் தேவாதி தேவர்களால் பெற முடியாத பாக்கியத்தைக் கூட பெறலாம்.


விஷ்ணுவின் சந்நிதிக்கு நேரே அமர்ந்து கொண்டு, பகவத் கீதையின் விபூதி யோகம், பக்தி யோகம், விஸ்வரூப யோகம் ஆகியவற்றை பாராயணம் செய்தால், சகல பாவங்களும் நீங்குவதுடன் புண்ணியங்களும் நம்மை வந்து சேரும்.


நவக்கிரக மூர்த்திகள் விரதம் அனுஷ்டித்து, வரம் பெற்ற கார்த்திகை ஞாயிறு விரதத்தை, முதல் ஞாயிறு தொடங்கி பன்னிரெண்டு வாரங்கள் கடைப்பிடித்தால், நவக்கிரகங்களால் ஏற்படும் தோஷங்கள் நீங்கி, சிவசக்தியின் பேரருள் கிடைக்கும் என்பது அடியார்களது நம்பிக்கை.


தன்னைப் பிரிந்த திருமகளுடன் மீண்டும் சேருவதற்காக மகாவிஷ்ணு தவம் மேற்கொண்டு, சிவபெருமானது அருளைப் பெற்ற திருத்தலம் ஸ்ரீவாஞ்சியம். இங்குள்ள குப்த கங்கை தீர்த்தத்தில் நடைபெறும் கார்த்திகை ஞாயிறு நீராடல் உற்சவம் மிகவும் பிரசித்தி பெற்றது. ஆண்டுதோறும் கார்த்திகை மாத ஞாயிற்றுக்கிழமைகளில், அதிகாலை 5 முதல் 6 மணிக்குள் சிவபெருமானும் பார்வதிதேவியும் அஸ்திர தேவரோடு பிரகார வலம் வந்து, குப்த கங்கையின் கிழக்குக் கரையில் ஆசி வழங்கி அருளுகின்றனர்.


கார்த்திகை மாதத்தின் ஞாயிற்றுக் கிழமைகளில் இந்த குப்த கங்கையில் நீராடினால் பிரம்மஹத்தி தோஷம், திருடுவதால் வரும் பாவம் மற்றும் மனச் சஞ்சலத்தால் ஏற்பட்ட பாவங்கள் ஆகியவை நீங்கி விடும் என்று பிரும்மாண்ட புராணம் கூறுகிறது.


கார்த்திகை மாதத்தின் முப்பது நாட்களிலும், அதிகாலையில் நீராடி, விரதம் இருந்து சிவவிஷ்ணு பூஜைகள் மற்றும் தீப தானம் செய்து, வீட்டின் எல்லா இடங்களிலும் தீபங்களை வரிசையாக ஏற்றி வைத்து வழிபட்டால், குறைவற்ற மகிழ்ச்சி உண்டாகும் என்று புராணங்கள் கூறுகின்றன.



: *மலட்டுத்தன்மையை போக்கி கருவுறுதலை அதிகரிக்கும் கொய்யாப்பழம்!!!*


ஏராளமான சத்துக்கள் நிறைந்துள்ள கொய்யாப்பழம் நமது ஆரோக்கியத்திற்கு எக்கச்சக்கமாக நன்மை பயக்கும். கொய்யாப்பழத்தில் ஆன்டிஆக்சிடன்டுகள், லைகோபீன் மற்றும் வைட்டமின் C காணப்படுகிறது. கொய்யாப்பழத்தில் ஃபோலேட் கருவுறுதல் செயல்முறையை மேம்படுத்துகிறது.


வேற்றுமை இல்லாமல் ஆண்கள் மற்றும் பெண்கள் ஆகிய இருவருக்கும் கொய்யாப்பழம் நன்மை பயக்கும். கர்ப்பிணி பெண்களுக்கும் கொய்யாப்பழம் சிறந்தது. நீரிழிவு நோய் உள்ளவர்கள் சாப்பிட கொய்யாப்பழம் ஏற்றது. நீங்கள் மலச்சிக்கலால் அவதிப்பட்டு வந்தால் தவறாமல் கொய்யாப்பழம் சாப்பிட்டு வாருங்கள். மலச்சிக்கலில் இருந்து விரைவில் குணமடையலாம்.


கொய்யாப்பழத்தில் காணப்படும் பொட்டாசியம் சத்தானது உங்கள் இதயத்தின் ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்கிறது. அதோடு உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள் அடிக்கடி கொய்யாப்பழம் சாப்பிட்டு வந்தால் நல்ல மாற்றம் தெரியும். மாதா மாதம் மாதவிடாய் பிரச்சினை உள்ள பெண்கள் கொய்யாப்பழம் சாப்பிட்டு வர நிவாரணம் கிடைக்கும்.


எனினும் உயர் இரத்த அழுத்தம், வயிறு சார்ந்த பிரச்சினைகள் மற்றும் நீரிழிவு நோய் உள்ளவர்கள் கொய்யாப்பழம் சாப்பிடும் முன் மருத்துவர்களை அணுகுவது நல்லது. வயிற்றில் காணப்படும் நல்ல பாக்டீரியாக்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதால் செரிமான பிரச்சனை உள்ளவர்களுக்கு கொய்யாப்பழம் ஏற்றது.


சர்க்கரை நோய் இருந்தால் ஒரு நாளைக்கு ஒரு கொய்யாப்பழம் சாப்பிடுங்கள். மலச்சிக்கலால் அவதிப்பட்டு வருபவர்கள் இரவு நேரத்தில் கொய்யாப்பழம் சாப்பிடலாம். உங்களுக்கு இரத்த அழுத்தம் குறைவாக இருந்தால் கொய்யாப்பழம் அதிகம் சாப்பிட கூடாது. எந்த ஒரு உடல் சார்ந்த பிரச்சினையும் இல்லாதவர்கள் 2 முதல் 3 கொய்யாப்பழம் வரை ஒரு நாளில் சாப்பிடலாம்.

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,