கர்ப்ப காலத்தில் ஆரஞ்சுப் பழம் சாப்பிடலாமா?...... எந்த அளவு மட்டும் சாப்பிடலாம்.

 கர்ப்ப காலத்தில் ஆரஞ்சுப் பழம் சாப்பிடலாமா?...... எந்த அளவு மட்டும் சாப்பிடலாம்..என்ற வினாவிற்கு உரிய விடையை காண்போம் வாரீர்!!




கர்ப்ப காலத்தில் பெண்கள் போதுமான அளவு வைட்டமின் சி பெற்று இருப்பது அவசியம் என மகப்பேறியியல் மருத்துவர்கள் கூறுகின்றனர். இதற்காக பெண்கள் ஆரஞ்சுப் பழத்தை எடுத்து வருவது நல்லது. இது கருவில் வளரும் குழந்தையின் மூளை வளர்ச்சிக்கும் எலும்பு ஆரோக்கியத்திற்கும், நரம்பு வளர்ச்சிக்கும் உதவுகிறது. எனவே இந்த ஆரஞ்சுப் பழத்தை எந்தளவு எடுத்துக் கொள்ள வேண்டும். அதன் பாதுகாப்பான அளவு என்ன என்பதை அறிந்து கொள்வோம்.


கர்ப்ப காலத்தில் பெண்கள் ஆரஞ்சுப் பழம் சாப்பிடுவது வளரும் குழந்தைகளுக்கு மிகவும் நல்லது என மகப்பேறியியல் மருத்துவர்கள் கூறுகின்றனர். பழங்கள் மற்றும் காய்கறிகளை கர்ப்ப காலத்தில் எடுத்துக் கொள்வது நல்லது என்று அனைவருக்கும் தெரிந்ததே. எனினும், ஆரஞ்சுப் பழம் சாப்பிடுவது கர்ப்ப காலத்தில் பெண்களின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. ஆரஞ்சுப் பழங்கள் வைட்டமின் சி நிறைந்த மூலமாகும். இது கர்ப்ப காலத்தில் காலை நோயில் இருந்து விடுபட உதவுகிறது.


கர்ப்ப காலத்தில் ஆரஞ்சுப் பழம் உண்பதால் ஏற்படும் நன்மைகள்



கர்ப்ப காலத்தில் முழு ஆரஞ்சு பழத்தையும் சாப்பிடுவது அதிக  நன்மைகளை தருகிறது.


 ஆரஞ்சு சாறு பிழிந்து கூட அருந்தலாம்.

சுளைகள் உண்ணலாம். ஆனால் பாக்கெட் மற்றும் டின்களில் விற்கப்படும் ஆரஞ்சுப் பழச் சாற்றை அருந்தக் கூடாது. எனவே முடிந்த வரை வீட்டில் தயாரிக்கப்படும் ஆரஞ்சு பழச்சாற்றை எடுத்துக் கொள்ளுங்கள்.


ஆரஞ்சுப் பழத்தில் வைட்டமின் சி, இரும்பு, துத்தநாகம் மற்றும் ஃபோலிக் அமிலம் நிறைந்துள்ளது. கர்ப்ப காலத்தில் ஆரஞ்சு சாப்பிடுவது உங்கள் நோயெதிர்ப்பு செயல்பாட்டை மேம்படுத்தும். மூளை வளர்ச்சியை வலுப்படுத்துகிறது. சரும ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. கர்ப்பத்தின் முதல் மூன்று மாதங்களில் ஆரஞ்சு நுகர்வு மிகவும் பரிந்துரைக்கப்படுகிறது, ஏனெனில் இது கருவின் மூளையின் வளர்ச்சிக்கு உதவுகிறது. 


 நோயெதிர்ப்பு சக்தியை வலுப்படுத்துதல்


ஆரஞ்சுப் பழங்களில் வைட்டமின் சி நிறைந்துள்ளது.

இது பெண் மற்றும் குழந்தையின் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தும். நோயெதிர்ப்பு மண்டலத்திற்கு இன்றியமையாத இரும்பு மற்றும் துத்தநாகத்தையும் ஆரஞ்சுப் பழம் வெளியிடுகிறது. ஆரஞ்சுப் பழம் சாப்பிடுவது கர்ப்பமாக இருக்கும்போது ஒவ்வாமை (வாந்தி , மயக்கம்) குறைக்க உதவும். இது குழந்தைகளில் குருத்தெலும்பு, திசுக்கள், இரத்த நாளங்கள் மற்றும் எலும்புகளின் வளர்ச்சியை அதிகரிக்கும்  என மருத்துவர்கள் கூறுகின்றனர்.



குழந்தையின் மூளை வளர்ச்சிப்படுத்துதல்


ஆரஞ்சுப் பழங்கள் வைட்டமின் பி 6 மற்றும் ஃபோலிக் அமிலத்தின் நல்ல மூலமாகும். கர்ப்பமாக இருக்கும்போது ஆரஞ்சுப் பழம் சாப்பிடுவது உங்கள் குழந்தையின் மூளையை வளர்க்கவும், நரம்புக் குழாய் குறைபாடுகளைத் தடுக்கவும் உதவுகிறது. அவை ஒரு குழந்தையின் மூளை மற்றும் முதுகெலும்பில் ஏற்படும் அசாதாரணங்களை சரி செய்யும் என அறியப்படுகிறது.


ஆரஞ்சுப் பழங்களில் உள்ள ஃபோலேட் உள்ளடக்கம் இரத்த அணுக்கள் உருவாகவும், புதிய திசுக்களின் வளர்ச்சிக்கும், ஆரோக்கியமான நஞ்சுக்கொடியின் வளர்ச்சிக்கும் உதவுகிறது . இருப்பினும், அதிகப்படியான ஃபோலேட் உட்கொள்ளல் ஒரு குழந்தையின் அதிக பிறப்பு எடைக்கு வழிவகுக்கும் என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். எனவே போதுமான அளவு போலேட் எடுத்துக் கொள்வது சிறந்தது முடிந்த வரை மருத்துவர் பரிந்துரைக்கும் அளவு மட்டுமே எடுத்துக் கொள்ளுங்கள்.


மலச்சிக்கலை தடுத்தல்


கர்ப்ப காலத்தில் மலச்சிக்கல் என்பது ஒரு பெரிய பிரச்சினையாக இருக்கும். ஆரஞ்சுப் பழங்களில்  கரையக்கூடிய மற்றும் கரையாத நார்ச்சத்து மற்றும் செல்லுலோஸ் நிறைந்துள்ளன, இது குடல் இயக்கத்தை முறைப்படுத்தவும் மலச்சிக்கலை குணப்படுத்தவும் உதவுகிறது. இவற்றில் நார்ச்சத்துக்கள் இருப்பதால் வயிற்று பிரச்சினைகள் மற்றும் வீக்கத்திலிருந்து நிவாரணம் அளிக்க உதவுகிறது.


இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துதல்


ஆரஞ்சுகளில் உள்ள அதிக பொட்டாசியம் கர்ப்பிணி பெண்களின் இரத்த அழுத்த அளவை கட்டுப்படுத்தவும், உயர் இரத்த அழுத்த அளவில் இருந்து நிவாரணம் தரவும் உதவுகிறது. இது உங்களை நீரேற்றமாக வைக்கவும் மற்றும் சரும ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவுகிறது


ஆரஞ்சுப் பழங்களில் உள்ள சோடியம் மற்றும் பொட்டாசியம் உடலில் திரவ அளவுகளின் சமநிலையை பராமரிக்க உதவுகிறது. 88% நீர் உள்ளடக்கத்துடன் உள்ளதால் மற்றும் உடலில் நீரைத் தக்க வைத்துக் கொள்ள உதவுகிறது.


ஆரஞ்சுப் பழங்களில் சக்தி வாய்ந்த ஆன்டி ஆக்ஸின்கள் உள்ளன. இது சருமத்தை மென்மையாகவும் உறுதியாகவும் வைத்திருப்பதோடு முகப்பருவைத் தடுக்க போதுமான ஈரப்பதத்தை அளிக்கும்.


எத்தனை ஆரஞ்சுப் பழங்களை சாப்பிடலாம்?


கர்ப்பிணிப் பெண்களுக்கு 85 மில்லிகிராம் வைட்டமின் சி தினசரி அளவு பரிந்துரைக்கப்படுகிறது. தினசரி மூன்று ஆரஞ்சுப் பழங்கள் அல்லது வைட்டமின் சி நிறைந்த பிற உணவுகளை உட்கொள்வதன் மூலம் இந்த தேவையை பூர்த்தி செய்ய முடியும். இருப்பினும், நீங்கள் மற்ற உணவுகளுடன் ஆரஞ்சுப் பழம் சாப்பிடும் போது, பகலில் நீங்கள் உட்கொள்ளும் மற்ற உணவுகளில் வைட்டமின் சி அளவையும் கருத்தில் கொள்ளுங்கள்.


நீங்கள் அதிகமாக உட்கொண்டால் ஆரஞ்சு அமிலத் தன்மையை உண்டாக்கும். உங்கள் தினசரி உட்கொள்ளல் பரிந்துரைக்கப்பட்ட உட்கொள்ளலை விட அதிகமாக இருக்கக்கூடாது என்பதை நினைவில் கொள்ளுங்கள். நீங்கள் மற்ற வைட்டமின்-சி நிறைந்த உணவுகளை சாப்பிட்டால், ஆரஞ்சுப் பழங்களை மிதமான அளவில் உட்கொள்வதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். உங்கள் உணவில் சேர்க்க வேண்டிய ஆரஞ்சுப் பழங்களின் எண்ணிக்கை குறித்து உங்கள் மருத்துவரை அணுகவும். அளவுக்கு அதிகமாக எடுக்காமல் இருந்தால் எந்த பிரச்சினையும் ஏற்படாது.


ஆரஞ்சுப் பழம் சாப்பிட சரியான நேரம்


ஆரஞ்சுப் பழங்களை எப்போது வேண்டுமானாலும் ஏன், வெறும் வயிற்றில்கூட உட்கொள்ளலாம். நீங்கள் தினமும் இரண்டு குவளை ஆரஞ்சு சாறு வரை குடியுங்கள் கால்சியம் நிறைந்த மூலமாக இருப்பதால், பேஸ்டுரைஸ் செய்யப்பட்ட ஆரஞ்சு சாறு உங்கள் எலும்புகளை வலுப்படுத்த உதவும். உங்களுக்கு லாக்டோஸ் இல்லாமல் இருந்தால், பாலுக்கு நல்ல மாற்றாக இருப்பதால், வலுவூட்டப்பட்ட ஆரஞ்சு சாற்றை நீங்கள் குடிக்கலாம். மற்றும் காலை நோயை குணப்படுத்த உதவுகிறது. உங்கள் குளுக்கோஸ் அளவு அதிகரிக்கக்கூடும் என்பதால் அதிக சர்க்கரை சேர்க்க வேண்டாம்.



 டாக்டர். செ. பியூலா செல்வமணி ,

இயற்கை மருத்துவ பயிற்சியாளர்,

அரசு யோகா இயற்கை மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை,

அரும்பாக்கம்,

சென்னை - 106

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,