எஸ்.எஸ்.வாசன் பிறந்த தினமின்று

 



எஸ்.எஸ்.வாசன் பிறந்த தினமின்று
குழலூதும் இரட்டைக் குழந்தைகள் எனும் டிரேட் மார்க் அந்தக் கால மனிதர்களுக்கு நல்ல அறிமுகம். இன்று மக்கள் மறந்திருக்கலாம். ஆம்! சென்னை அண்ணாசாலையில் அன்றைய மவுண்ட் ரோடில் இப்போது ஜெமினி மேம்பாலம் என்று அழைக்கப்படும் இடத்தில் நுங்கம்பாக்கம் திருப்பத்தில் அமைந்திருந்தது அந்த சினிமா ஸ்டுடியோ. அதன் அதிபர்தான் எஸ்.எஸ்.வாசன். சுப்ரமணியம் ஸ்ரீநிவாசன் என்பதன் சுருக்கம் இது.
அறுபது ஆண்டுகளுக்கு முன்பு மிக பிரமாண்டமான ‘சந்திரலேகா’, ‘ஒளவையார்’ போன்ற படங்களை எடுத்து இந்தியாவின் சிசில் பி டெமிலி என்று பெயர் வாங்கிய இந்த திரைப்படத் தயாரிப்பாளர் பன்முகத் திறமை மிக்கவர். இவர் எடுத்த எந்தவொரு படமும் சோடை போகவில்லை. ஒவ்வொரு படமும் ஒவ்வொரு விதத்தில் புகழ் பெற்றது. ஜெமினி ஸ்டுடியோ அவ்வப்போது படம் எடுக்கக் கூடுகின்ற கம்பெனி போல அல்ல. அது ஒரு நிரந்தர ஸ்தாபனம்.
அங்கு ஊழியர்கள், டெக்னீஷியன்கள் போன்றவர்கள் நிரந்தரமாகப் பணியாற்றினார்கள். கதைக்கு என்று ஒரு இலாகா. அதில் பணிபுரிந்தவர்களும் உலகப் புகழ் பெற்றனர். கொத்தமங்கலம் சுப்பு, வேப்பத்தூர் கிட்டு போன்றவர்களை உலகுக்குக் காட்டிய ஸ்தாபனம் ஜெமினி. இதன் முதலாளி எஸ்.எஸ்.வாசன் திரைப்பட தயாரிப்பாளர், சினிமா ஸ்டுடியோ அதிபர், பத்திரிகை முதலாளி, சினிமா இயக்குனர், எழுத்தாளர், தொழிலதிபர் போன்ற பல நிலைகளில் பிரபலமானவர்.

From The Desk of கட்டிங் கண்ணையா

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,