Posts

ஸ்ரீ லட்சுமி கடாட்சம்

Image
ஸ்ரீ லட்சுமி கடாட்சம்     ஸ்ரீலக்ஷ்மி வைகுண்டத்தில் மகாலக்ஷ்மியாகவும், இந்திரனிடத்தில் சொர்க்க லக்ஷ்மியாகவும், மன்னர்களிடத்தில் ராஜலக்ஷ்மியாகவும், வீரர்களிடம் தைரிய லக்ஷ்மியாகவும், குடும்பத்தில் கிரக லக்ஷ்மியாகவும் விளங்குகிறாள். மஹாலஷ்மி பாற்கடலில் தோன்றியவள்..உப்பின் பிறப்பிடம் கடல் வெள்ளிக்கிழமைகளில் உப்பு வாங்குதல் மிகவும் விஷேசம்.. மஹாலக்ஷ்மிமலரின் அழகு. அருள் பார்வையுடன் திகழும் செல்வத்தின் தெய்வம். விஷ்ணு பிரியை. கிரியா சக்தி. திருப்பாற்கடலில் இருந்து அமுதத்துடன் தோன்றியவள். அமுத மயமானவள். பொன்னிற மேனியுடன் கமலாசனத்தில் (செந்தாமரையில்) வீற்றிருக்கிறாள். நான்கு யானைகள் எப்போதும் நீராட்டுகிறது. செல்வ வளம் தந்து வறுமையை அகற்றி அருள் புரிபவள். கஜலக்ஷ்மி பாற்கடலில் இருந்து வெளிப்பட்டதும், அஷ்டதிக்கு கஜங்கள் எனப்படும் எட்டு யானைகள் தமது மனைவியரான பெண் யானைகளுடன், அவளுக்கு மங்கல நீராட்டின என்று புராணங்கள் கூறுகின்றன. பல்லவர்கள் அமைத்துள்ள குடைவறைக்கோயில்களில் பலவற்றில், யானைகள் நீரை முகந்து நீராட்ட, தாமரை மலரில் வீற்றிருக்கும் திருமகளைக் காண முடியும். யானைகளின் பிளிறலை லக்ஷ்மி...

நோய் எதிப்பு சக்தியை அதிகரிக்கும் தால் மக்கானி

Image
நோய் எதிப்பு சக்தியை அதிகரிக்கும் தால் மக்கானி தால் என்றால் பருப்பு. மக்கானி என்றால் வெண்ணெய்,   கருப்பு உளுந்து உடலுக்கு மிகவும் நல்லது. தால் மக்கானியை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் சர்க்கரை வியாதி, ரத்த கொதிப்பு, இதயம் சார்ந்த நோய்கள் போன்றவை வராமல் தற்காத்துக் கொள்ளலாம்.          தால் மக்கானி தேவையான பொருட்கள் : கருப்பு உளுந்து - 1 கப் கடலை பருப்பு - கால் கப் சி.வெங்காயம் - ஒரு கைப்பிடி அளவு பச்சை மிளகாய் - 5 (நறுக்கவும்)   இஞ்சி, பூண்டு பேஸ்ட் - 2 டீஸ்பூன் கொத்தமல்லி தூள் - அரை டீஸ்பூன்   மிளகாய் தூள் - 1 டீஸ்பூன் கரம் மசாலா தூள் - 1 டீஸ்பூன் சீரகம் - 1 டீஸ்பூன் தக்காளி - 2 உப்பு - தேவைக்கு   நல்லெண்ணெய் - 3 டீஸ்பூன்   வெண்ணெய் - 5 டீஸ்பூன்   கொத்தமல்லி தழை - சிறிதளவு செய்முறை: சின்ன  வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள். உளுந்தையும், கடலை பருப்பையும் நீரில் நன்கு கழுவிவிட்டு இரவு...

முட்டை குருமா

Image
முட்டை குருமா   சப்பாத்தி, தோசை, இட்லி, நாண், இடியாப்பத்திற்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும் முட்டை குருமா. இன்று இந்த ரெசிபியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.       முட்டை குருமா   தேவையான பொருட்கள் : முட்டை - 5 இஞ்சி, பூண்டு விழுது - சிறிதளவு தக்காளி - 1 பெ.வெங்காயம் - 1   பச்சை மிளகாய் - 4 சோம்பு, கிராம்பு, கசகசா - சிறிதளவு தேங்காய் துருவல் - கால் கப் மஞ்சள் தூள், மிளகாய் தூள் - சிறிதளவு சாம்பார் பொடி - சிறிதளவு கொத்தமல்லி - சிறிதளவு எண்ணெய், உப்பு - தேவைக்கு     செய்முறை : தக்காளி, வெங்காயம், கொத்தமல்லி, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும். முட்டையை வேக வைத்துக்கொள்ளுங்கள். சோம்பு, கிராம்பு , கசகசா, தேங்காய் துருவல் போன்றவற்றை மிக்சியில் விழுதாக அரைத்துக்கொள்ளுங்கள். வாணலியில் எண்ணெய் ஊற்றி அது சூடானதும் வெங்காயத்தை போட்டு நன்றாக வதக்கவும். வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி, பூண்டு விழுது, உப்பு சேர்த்து வதக்கவும். இஞ்சி பூண்டு விழுது பச்சை வாசனை போனவுடன் தக்காளி சேர்த்து வதக்கவும். தக்காளி குழைய வதங்கியதும் மிளகாய் தூள், சாம்பார்பொடி, ம...

பேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களுக்கு சவால்விடும் விதமாக PICGRAPHY செயலி

Image
, தேனியைச் சேர்ந்த எட்டாம் வகுப்பு மாணவர் உருவாக்கியுள்ள PICGRAPHY செயலி , வரவேற்பை பெற்று வருகிறது .   தொழில்நுட்பம், அறிவியல் கண்டுபிடிப்புகள் என்றாலே மேற்கத்திய நாடுகள் தான் என்ற சிந்தனையை கட்டுடைத்து வருகின்றனர் சமகால இந்திய மாணவர்கள். அத்தகைய மாணவர்களில் ஒருவராக திகழ்ந்து வருகிறார் தேனியைச் சேர்ந்த 13 வயதான மிதுன் கார்த்திக்.   தேனி திட்டச்சாலையைச் சேர்ந்த பாலமுருகன் - ஜெயமணி தம்பதியின் மகனான மிதுன் கார்த்தி, இங்குள்ள தனியார் சி.பி.எஸ்.இ. பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வருகிறார். மூன்று வயது முதலே கம்ப்யூட்டர் மற்றும் மொபைல் போன்கள் மீது அதீத ஆர்வம் கொண்ட மிதுன், கடந்த ஆறு மாதங்களாக பள்ளிகள் திறக்கப்படாததால், அதனை பயனுள்ளதாக மாற்றி, "பிக்கிராபி" எனும் சமூக வலைதள செயலியை வடிவமைத்துள்ளார். பேஸ்புக் , இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களுக்கு சவால்விடும் விதமாக PICGRAPHY செயலி , வரவேற்பை பெற்று வருகிறது செயலி வடிவமைப்பு மட்டுமின்றி, வெப்சைட் டிசைன்களிலும் கலக்கி வரும் மாணவர் மிதுன், விரைவில் ZOOM செயலிக்கு மாற்றாக "ஹலோ நண்பா" என்ற செயலியை அறிமு...

மக்கள் பாதுகாப்பு பேரவை சார்பாக முதலாம் ஆண்டு வீர வணக்க நாள்

Image
மக்கள் பாதுகாப்பு பேரவையின் முன்னாள் மாவட்ட செயலாளர் திரு. R. சந்திரசேகர் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவு அஞ்சலி இன்று பேரவைத் தலைமை அலுவலகம் எதிரில்  *24/08/2020 காலை  பத்து முப்பது மணி அளவில் மத்திய சென்னை மாவட்ட செயலாளர் திரு.ஷாம் ஜெய்கரன் அவர்கள் தலைமையில்  பேரவையின் *நிறுவனத்தலைவரும் உயர்நீதிமன்ற வழக்குரைஞருமான திரு. தங்க சாந்தகுமார் அவர்கள் ,   தெய்வத்திரு R.சந்திரசேகர் அவர்களின் திருவுருவப் படத்தை திறந்து வைத்து மலர் தூவி மரியாதை செய்து நினைவுரையாற்றினார். இதில் பேரவை சொந்தங்கள் பெருந்திரளாக கலந்து கொண்டு  வணக்கங்கள் செலுத்தினர். அன்னாரின் குடும்பத்திற்கு ஆறுதலும் உதவியும் செய்யப்பட்டது அதுமட்டுமல்லாமல் அன்னாரின் குடும்பத்திற்கு எப்பொழுதும் பேரவை சொந்தங்கள் உறுதுணையாக இருப்போம் என்று உறுதிமொழியும் ஏற்கப்பட்டது   இந்த நிகழ்வின் காணொளி            

ஓடிடி-யில் வெளியாகும் `சூரரைப் போற்று

Image
ஓடிடி-யில் வெளியாகும் `சூரரைப் போற்று   முதல்முறையாக பெரிய பட்ஜெட் படமாக தயாரிக்கப்பட்ட பெரிய ஸ்டாரான சூர்யாவின் படம் 'சூரரைப் போற்று'. நேரடி ஓடிடி ரிலீஸூக்கு வந்திருப்பது சினிமா உலகில் மிகப்பெரிய அதிர்வுகளை ஏற்படுத்தியிருக்கிறது என்பது உண்மையே முதல்முறையாக மிகப்பெரிய தொகைக்கு நேரடி ஓடிடி ரிலீஸூக்கு இந்தப்படம் விற்கப்பட்டிருக்கிறது சூர்யாவின் கடந்த ஏப்ரல் மாதம் 'பொன்மகள் வந்தாள்' படத்தை நேரடி ஓடிடி ரிலீஸுக்கு வாங்கும்போதே அமேசான் நிறுவனம் 'சூரரைப் போற்று' படத்துக்கும் டீல் பேசி அட்வான்ஸ் கொடுத்துவிட்டது. ஆனால், 'சூரரைப்போற்று' நேரடி ஓடிடி ரிலீஸா அல்லது தியேட்டர் ரிலீஸுக்குப் பின் ஒளிபரப்பலாமா என்பதை ஆகஸ்ட்டில் முடிவு செய்யலாம் எனப் பேசப்பட்டிருந்தது. இந்நிலையில்தான் செப்டம்பரில் தியேட்டர்கள் திறந்தாலும் 40 சதவிகிதம் பார்வையாளர்கள்தான் தியேட்டருக்கு வரமுடியும் என்பதோடு, பல்வேறு நிபந்தனைகளும் விதிக்கப்பட இருப்பதாகச் சொல்லப்பட்டது. இதற்கு காரணம்  இந்த வாரம் சென்னையில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன. டாஸ்மாக் வாசல்களில் மிகப்பெரிய கூட்டம் கூடும...

கணநாதனே துணை

Image
விநாயகருக்கு ஒரு பாட்டு               பல்லவி  கணநாதனே துணை  நாளும் கணபதியை நினை  தும்பிக்கையனை  துதிப்போர்க்கு வளம்தரும் வாழ்வினை  அருளும்  கணநாதனே துணை நாளும் கணபதியை  நினை         சரணம் 1  முன்னிருக்கும் தெய்வமென   ஆலயங்கள் அனைத்திலும்  அமர்ந்திருக்கும்  ஆனைமுகத்தனைப்  பாரு  ஆனந்தம் தருவது பிள்ளையாரு   எளிமையில் இருப்பவன்  வலிமையை சேர்ப்பவன்  இடர் நீக்கி காப்பவன்  இன்பத்தை அளிப்பவன்   அகமதில் குளிர்ந்திடும் கணநாதனே துணை  நாளும் கணபதியை நினை     சரணம் 2  அரச மரத்தடியிலும் வீற்றிருப்பான்  அருகம்புல் வைத்தாலும் ஏற்றுக் கொள்வான்  விநாயகர் சதுர்த்தி அன்று  களிமண்ணிலும் கடவுளாய் காட்சி தருவான்   களிப்போடு வீடு  வந்து அருள் புரிவான்  முக்கண்ணனின்  தலை  மகனே  முழுமுதல்  கடவுள்என போற்றப்படும் விநாயகனே   நல்லாசியுடன் ஆறுதலையும் அருளும்  கணநாதனே துணை நாளு...