நிசப்தம் /கவிதை
நிசப்தம்
ஒலிப்பான்களோடு
பழகிய
காதுகளுடன்
புரண்டு அழும்
பகலுக்கு
பின்னால்
அடர்ந்த காடுகளை
நினைவு படுத்தும்
என் வீட்டு மரங்களின்
பூக்களை
பறவைகள்
சற்றே உதிர்க்க
மெலிதாக
சிணுங்கிய
காற்றுடன்
கலந்தே வருகிறது
இரவின்
கருமையாக
படிந்து கிடக்கும்
நிசப்தம்
Comments
Pavendan