Posts

கொன்றை வேந்தன்3.இல்லறம் அல்லது நல்லறம் அன்று | கவிஞர் ச.பொன்மணி

Image
  கொன்றை வேந்தன் 3.இல்லறம் அல்லது நல்லறம் அன்று  | கவிஞர் ச.பொன்மணி video link விளக்கவுரை & ஒளி வடிவம் கவிஞர் ச.பொன்மணி

ஞாயிறு திரை மலர்,28.3.2021

Image
  ஞாயிறு திரை மலர்,28.3.2021 +++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++ அரிய புகைப்படங்கள் ++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++ `பாதாள பைரவி', `கல்யாணம் பண்ணிப்பார்', `குணசுந்தரி', `மிஸ்ஸியம்மா', ‘மாயாபஜார்’ என்று வெற்றிப் படங்களின் விளைநிலமாகத் திகழ்ந்தது விஜயா புரொடக்‌ஷன்ஸ். எம்.ஜி.ஆர். தனது ‘நாடோடி மன்னன்’படத்தை முடிக்க முடியாமல் பிரச்சினைகளில் சிக்கிக்கொண்டபோது, அந்தப் படத்தை எடுத்து வெளியிடக் கைகொடுத்தார் நாகி ரெட்டியார். இறுதிவரை “முதலாளி” என்று எம்.ஜி.ஆரால் அழைக்கப்பட்ட நாகிரெட்டியார் ஒரு தொழிலாளியாகவே எளிய வாழ்க்கை வாழ்ந்தார். பத்திரிகை, திரையுலகம் ஆகிய இரு ஊடகங்களில் அவர் நிகழ்த்திச் சென்ற சாதனைகள் பயிலப்பட வேண்டிய பாடம். நன்றி: இந்து தமிழ் திசை +++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++ பூங்கோதை: வருவதற்கு நேரான வழி இருக்கும் போது குறுக்கு வழியில் ஏன் வர வேண்டும்? மலைக்கள்ளன்: பூவைத் தேடி ஓடிவரும் வண்டு, தோட்டக்காரனை எழுப்பி சொல்லிவிட்டா வரும்??! =====================...

பட்டுக்கோட்டை அழகிரி நினைவு நாள்

Image
  பட்டுக்கோட்டை அழகிரி நினைவு நாள் இன்று மார்ச் 28 பட்டுக்கோட்டை அழகிரி திராவிட இயக்கத்தின் தலைவர்களுள் ஒருவரும், கவிஞருமாவார். புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் அருகில் உள்ள கருக்காக்குறிச்சி கிராமத்தில் வாசுதேவன் - கண்ணம்மா தம்பதியருக்கு 23.06.1900 அன்று பிறந்தவர். சிறுவயதில் தந்தை இறந்து விட்டதால் தாய் வழிப் பாட்டனாரின் ஊரான மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே உள்ள வாவிடைமருதூர் கிராமத்தில் வளர்ந்தார். பத்தாம் வகுப்போடு பள்ளி படிப்பை முடித்துக் கொண்டவர் முதலாம் உலகப் போர் காலத்தில் ராணுவத்தில் சேர்ந்து பணியாற்றினார். அரசியல் தொகு கூட்டுறவு சங்கமொன்றில் எழுத்தராகச் சேர்ந்தார். ரிவோல்ட் என்னும் பத்திரிக்கையின் ஆசிரியர்களாக இருந்த பெரியார், ராமநாதன், குத்தூசி குருசாமி ஆகியோர்களில் குத்தூசி குருசாமியை ஒரு நாளேடு தரக்குறைவாக எழுதியது. இதனால் கோபமடைந்த அழகிரி அந்த நாளேட்டின் அலுவலகம் சென்று அந்த ஆசிரியரை அடித்துவிட்டு திரும்பினார். அழகிரிதான் முதன் முதலில் பட்டுக்கோட்டையில் சுயமரியாதை சங்கம் தொடங்கி உறுப்பினர் சேர்த்து சுயமரியாதை பிரச்சாரம் செய்தார். அதன் பிறகே தந்தை பெரியாரால் சுயமரியாத...

மாக்சிம் கார்க்கி

Image
  மாக்சிம் கார்க்கி பிறந்த நாள் இன்று மார்ச் 28 கார்க்கியின் இளவயது வாழ்வு துயரமும் கண்ணீரும் இருளும் நிறைந்தது. அந்த இருளில் அவருக்கு ஒளிவிளக்காய்த் திகழ்ந்தது. அவரது பாட்டி அக்குலினா. இந்தப் பாட்டி மட்டும் இல்லையென்றால் பேரன் கார்க்கி எட்டு வயதிலேயே மடிந்திருப்பார். தனது பாட்டியைப் பற்றி அவர் குறிப்பிடும்போது - “என் பாட்டிதான் மனித வாழ்வை எனக்கு முதன்முதலில் போதனை செய்தார். அவளது வாழ்க்கை அனுபவங்களிலிருந்து படைத்து எனக்குச் சொன்ன ராஜா ராணிக் கதைகள்தான், எனக்கு அறிவுப் பாடம் நடத்தின. அந்தப் பாட்டியின் கதைகளைத் தனது இறுதிக்காலம் வரை கேட்கக் கிடைக்காத புதையல் என்று மதித்துப் பேணிப் பாதுகாத்தார். கார்க்கியின் வாழ்வுக்கு இன்பமூட்டி, அறிவொளி பாயச் செய்த பாட்டி அக்குலினாவை “எனது குழந்தைப் பருவம்” என்ற நூலில் அறிமுகப்படுத்தியுள்ளார். தனது பத்தாவது வயதிலேயே வாழ்க்கை நடத்த வீட்டை விட்டு வெளியேறினார். தந்தை இறந்ததால் ஏற்பட்ட துயரமும் வறுமையும் அவரை விரட்டின. குழந்தைத்தொழிலாளியாக மாறி அவர் பல இடங்களில் வேலை செய்தார். பத்து வயது முதல் கார்க்கி தனக்கென ஒரு குறிப்பேடு வைத்துக் கொண்டார். பத்து வ...

வி.நாகையா

Image
  நடிகர் வி.நாகையா பிறந்த நாள் இன்று மார்ச் 28 வி. நாகையா - வித்யாவதி வித்யாவதி சினிமாவில் நடிகையாக அக்கா சந்தியாவுக்கு முன்னதாகவே நுழைந்தவர். அவர் தான் பின் அக்காவையும் சினிமா நடிகையாக உதவியவர். ஜெயலலிதாவின் தாயார் சந்தியா. கல்யாண்குமார் என்னிடம் சொன்ன ஒரு தகவல். 1954ல் கல்யாண்குமார் கதாநாயகனாக கன்னடப்படத்தில் அறிமுகமான போது அவருக்கு முதல் படத்தில் ஜோடி வித்யாவதி தான். ஜெயலலிதாவுடனும் கல்யாண்குமார் பின்னால் ஜோடி சேர்ந்து நடித்திருக்கிறார். 1953ம் ஆண்டு நடிகர் வி.நாகையா தயாரித்த ’என் வீடு’ படத்தில் வில்லியாக வித்யாவதி நடித்தார். வாழ்க்கையிலும் இருவரும் இணைந்தனர். நாகையாவின் அபிமான தாரமாக வித்யாவதி ஆகிப்போனார். வி. நாகையா கண்ணியமான பாத்திரங்களில் படங்களில் வருபவர். 1956ம் ஆண்டு ’அலிபாபாவும் நாற்பது திருடர்களும்’ படத்தில் எம்.ஜி.சக்ரபாணிக்கு ஜோடியாக நடித்தார். விசிறியால் விசிறிக்கொண்டு வரும் வில்லி. ஃபியட் கார் செல்ஃப் ட்ரைவிங். சிகரெட் புகைத்த நடிகை வித்யாவதி. சந்தியாவும் வித்யாவதியும் கூட இணைந்து நடித்திருக்கிறார்கள். நாமக்கல் சேஷையங்காரின் சிஷ்யர்களில் பிரதானமானவர் சித்தூர் வி நாக...

நினைத்ததெல்லாம் நிறைவேற.. விரதத்தை கடைபிடிப்பது எப்படி?/ பங்குனி உத்திர விரதம்...!!

Image
  இன்றுபங்குனி உத்திரம்.. 28/3/2021 நினைத்ததெல்லாம் நிறைவேற.. விரதத்தை கடைபிடிப்பது எப்படி? பங்குனி உத்திர விரதம்...!! தமிழர் பாரம்பரியத்தில் எண்ணற்ற விழாக்கள் கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு தமிழ் மாதமும் ஒவ்வொரு தெய்வத்திற்கு விழாக்கள் எடுக்கப்படுகின்றன. அந்த வரிசையில் தமிழ் மாதங்களில் கடைசி மாதமான பங்குனியில் கொண்டாடப்படுகின்ற விழாவே பங்குனி உத்திர விழாவாகும். இந்த வருடம் பங்குனி உத்திர விழாவானது இன்று மார்ச் 28ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் பங்குனி உத்திர விரதம் இருப்பது எப்படி? விரைவில் திருமணம் கைகூட என்ன செய்யலாம்? கணவன்-மனைவி ஒற்றுமை அதிகரிக்க என்ன செய்யலாம்? தெய்வ நிலையை அடைய என்ன செய்யலாம்? போன்ற விரத முறைகளையும், அதனால் உண்டாகும் பலன்களை பற்றி விரிவாகப் பார்க்கலாம்... விரதம் இருப்பது எப்படி? பங்குனி உத்திர விரதத்தை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனுஷ்டிக்கலாம். பங்குனி உத்திர தினத்தன்று அதிகாலையில் எழுந்து குளித்துவிட்டு வீட்டில் விளக்கேற்றி முருகப்பெருமானை வணங்க வேண்டும். பங்குனி உத்திரத்தன்று காலையில் நீராடியதுமே விரதத்தை தொடங்கி விட வேண்டும். ...

ஆறுமுகம் கொண்டவனே/பங்குனி உத்திர முருகன் பாடல்

Image
    முருகு தமிழ்   பங்குனி உத்திரம் அதற்கான கவிஞர் ச.பொன்மணி    வழங்கும் முருகன் பாடல் திருச்செந்தூர் முருகன் பாடல் | | ஆறுமுகம் கொண்டவனே video link முருகு தமிழ் கவிஞர் ச.பொன்மணி