Posts

கன்னட சூப்பர் ஸ்டார் புனித் ராஜ்குமார் திடீர் மரணம்

Image
  கன்னட சூப்பர் ஸ்டார் புனித் ராஜ்குமார் திடீர் மரணம் - ரசிகர்கள் அதிர்ச்சி கன்னட சூப்பர் ஸ்டார் புனித் ராஜ்குமார் மாரடைப்பு காரணமாக பெங்களூருவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். : அக்டோபர் 29,  2021 14:45  PM கன்னட திரை உலகில் பிரபல கதாநாயகனாக இருப்பவர் புனித் ராஜ்குமார். இவர் மறைந்த நடிகர் ராஜ்குமாரின் மகன் ஆவார். புனித் ராஜ்குமாரை கர்நாடக மக்கள் செல்லமாக ‘அப்பு‘ என்று அழைத்து வருகிறார்கள். பல்வேறு வெற்றிப்படங்களை கொடுத்த புனித் ராஜ்குமார்  புனித் ராஜ்குமார் திடீர் மாரடைப்பு காரணமாக இன்று காலை பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.  அவருக்கு தொடர்ந்து டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருவதாக தகவல்கள் வெளியாகின. தொடர்ந்து  நடிகர் புனித் ராஜ்குமாரின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும் சிறப்பான சிகிச்சை அளித்து வருவதாகவும்  இப்போது எதுவும் கூற முடியாது, ஐசியுவில் சிகிச்சை தொடர்ந்து வருகிறது என மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில்,  புனித் ராஜ்குமார் சிகிச்சை பலன...

வேவு பார்க்கும் வானம்/உமாசங்கர் கவிதைகள்.

Image
வான் தந்த  வான்மழையை,  கழனியெங்கும் தேக்கி வைத்து,  குவலயத்தின் பசியாற்ற,  கதிர்மணி செந்நெல்லாக்கித் தரும் பணியை  கண்காணிக்க,  காலாட்படையென தென்னையினை  நிற்க வைத்தும்  திருப்தியில்லாத வானம் , வெண்முகிலோடு  வந்து வேவு  பார்த்து செல்கிறது!

தீபாவளியில் தன்வந்திரி வழிபாடா

Image
  இது அன்புடன் ஆன்மிகம் சொல்கிறார் திருமதி. சுமிதா ரமேஷ். தீபாவளியில் தன்வந்திரி வழிபாடா|தனதிரயோதசி|Dhanthres|date|தீபாவளி2021 #தீபாவளி2021 #தன்வந்திரிவழிபாடு #தனதிரயோதசி #dhanthres #deepavali2021 #diwali2021 #sumischannel #sumitharamesh நமது தீராத நோய்களையும் ஸ்ரீ தன்வந்திரி பகவானை விரதம் இருந்து வழிபட்டால் அற்புதமான பலன்களை தருகிறது தனதிரயோதசி (November 2-2021) நவம்பர் 2ம் தேதி காலை 7 மணிக்கு மேல் நவம்பர் 3 ம் தேதி காலை 7 மணி வரை அற்புதமான தனதிரயோதசியில் தன்வந்திரி பகவானை வழிபடலாம். ஏன்..எப்படி எதற்காக ? எப்படி தோன்றினார் தன் வந்தரி..இவரது முக்கியத்துவம் என்ன..வாங்க பார்க்கலாம்..! இது அன்புடன் ஆன்மிகம் சொல்கிறார் திருமதி. சுமிதா ரமேஷ்.

ரஜினிகாந்த் இன்று மாலை திடீரென மருத்துவமனையில் அனுமதி

Image
  நடிகர் ரஜினிகாந்த டெல்லியில் தாதா சாகேப் பால்கே விருதை பெற்ற பிறகு கடந்த செவ்வாய்க்கிழமை நள்ளிரவில் சென்னை திரும்பினார். இன்று காலை தனது குடும்பத்தினருடன் ‘அண்ணாத்த’ திரைப்படத்தைப் பார்த்ததாக ‘ஹூட்’ செயலியில் அவர் பதிவிட்டிருந்தார். இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்த் இன்று மாலை திடீரென மருத்துவமனையில் அனுமதி க்கப்பட்டுள்ளார். ஆனால் வழக்கமான உடல்நிலை பரிசோதனைக்காகவே சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் நடிகர் ரஜினிகாந்த் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் நடிகர் ரஜினிகாந்த பூரண நலத்துடன் உள்ளதாகவும், பரிசோதனை முடிந்து விரைவில் அவர் வீடு திரும்புவார் எனவும் அவரது மனைவி லதா ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

வானிலை

Image
 வானிலை☂️ தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கிய நாளில் இருந்து பரவலாக மழை பெய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக வங்க கடலில் உருவாகி இருக்கும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக இன்று (வியாழக்கிழமை) முதல் 31-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) வரை தமிழகத்தில் அனேக இடங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருக்கிறது. அதன்படி, இன்று ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி, மயிலாடுதுறை, நாகை மாவட்டங்கள் மற்றும் காரைக்காலில் ஓரிரு இடங்களில் கனமழையும், தென் மாவட்டங்கள், கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் மிதமான மழையும், உள் மாவட்டங்களில் சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும். நாளை (வெள்ளிக்கிழமை), நாளை மறுதினம் (சனிக்கிழமை) தென் மாவட்டங்கள் மற்றும் கடலோர மாவட்டங்களில் சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழையும், ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், ஏனைய மாவட்டங்களில் அனேக இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழையும் பெய்ய வாய்ப்பு இருக்கிறது. 31-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், மதுரை...

மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்களை சந்தித்த நடிகர் பார்த்திபன்

Image
  67-வது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழாவில், சிறப்பு ஜூரி விருது பெற்ற திரைப்பட நடிகரும், இயக்குநருமான திரு.@rparthiepan அவர்கள் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் @mkstalin அவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றார்.

யதார்த்தமாய் கலைஞன் மகேந்திரன்

Image
  யதார்த்தமாய் வாழ்ந்து மறைந்த கலைஞன் மகேந்திரன் திரைப்படத்திற்குள் நுழைவதற்கு முன்னால் துக்ளக் பத்திரிகையில் பணியாற்றியவர் மகேந்திரன். அதில் விளிம்பு நிலையில் வாழக்கூடிய எளிய மக்களைச் சந்தித்து ஒரு தொடரை எழுதினார். ஆச்சர்யம் தரும் தொடர் அது. சாலையோரக் காய்கறிக் கடை வைத்திருக்கும் பெண்கள், நாளெல்லாம் அலைந்து கோலப்பொடி விற்பவர்கள், சினிமாவில் உதிரியான வேஷங்களுக்கு வந்து செல்லும் அவ்வளவாக முகந்தெரிந்தும் பெயர் தெரியாத நடிகைகள் – இப்படிப் பலருடைய வாழ்க்கையைப் பற்றிய பதிவாக இ,ருந்தது அந்தத் தொடர். மனம் ஒன்றி அந்தத் தொடரை எழுதியதற்கு நல்ல வரவேற்பு . பின்னாளில் திரைத்துறையில் புகுந்து வசனம் எழுதி, படத்தை இயக்கித் தனித்துவமான இயக்குநராகப் பெயர் எடுத்த பிறகு அவருடைய வீட்டில் சந்தித்துப் பேசிக் கொண்டி,ருந்த போது அவர் முன்பு எழுதிய தொடரைப் பற்றிப் பேச்சு வந்தபோது மென்குரலில் சொன்னார். “எளிமையான மக்களைச் சந்திப்பது பெரிய அனுபவம்ங்க. அவங்க எவ்வளவு எளிமையா நமக்குக் கற்றுக் கொடுக்கிறாங்க… தெரியுமா?” அருமையான கலைஞனாகவும், மனிதராகவும் வாழ்ந்து, வணிகமயமாக வாழாமல் மறைந்த இயக்குநர் மகேந்திரன் எதி...