Posts

நாங்க சொல்றது தான்.. ரஜினியை மடக்கிய சன் பிக்சர்ஸ்

Image
பட்டது போதும், இந்த வாட்டி நாங்க சொல்றது தான்.. ரஜினியை மடக்கிய சன் பிக்சர்ஸ் அண்ணாத்த அம்போ முன்னணி நடிகர்களின் படங்கள் என்றால் அந்த படத்தில் யார் இயக்குனர் யார் இசையமைப்பாளர் யார் நடிகை என்பதை எல்லாம் அந்த நடிகர்கள்தான் தீர்மானம் செய்வார்கள் எனவும் அதற்கான பட்ஜெட் என்னவானாலும் தயாரிப்பு தரப்பு ஏற்றுக்கொண்டுதான் ஆகவேண்டும் என்கிற வழக்கம் சினிமாவில் நீண்ட காலமாகவே இருந்து வருகிறது. ஆனால் இப்போதெல்லாம் தயாரிப்பாளர்கள் நடிகர்களை கட்டுப்படுத்த ஆரம்பித்துள்ளது நல்ல முறையாக பார்க்கப்படுகிறது. தமிழில் முன்னணி நடிகர்களாக இருக்கும் விஜய், அஜித், ரஜினி, கமல் போன்றோர் தங்களது படங்களில் அதிகம் தலையீடு வைத்து வருவதாக கடந்த சில வருடங்களாக செய்திகள் வெளிவந்த நிலையில் தற்போது அவர்களே தயாரிப்பாளர்களுக்கு உங்கள் இஷ்டப்படி நடந்து கொள்ளுங்கள் என்று சொல்வது பாசிட்டிவாக பார்க்கப்படுகிறது. இருந்தாலும் சில சமயங்களில் அவர்களின் தலையீடு இருக்கத்தான் செய்கிறது என்கிறது சினிமா வட்டாரம். சரி அண்ணாத்த விஷயத்துக்கு வருவோம். ரஜினி மற்றும் சிறுத்தை சிவா கூட்டணியில் மிகப் பெரிய எதிர்பார்ப்பில் வெளியாகி கலவையான விமர்சன...

விலை 60 ஆயிரம் ரூபா.இ-ஸ்கூட்டர்

Image
  விலை 60 ஆயிரம் ரூபா... ரேஞ்ஜ் 100 கிமீ... ஒரே நாளில் 4 புதிய இ-ஸ்கூட்டர்களை களமிறக்கிய இந்திய நிறுவனம் இ-ஸ்கூட்டர் 60 ஆயிரம் ரூபாய்க்கு அதிக தூரம் பயணிக்கக் கூடிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை மின் வாகன தயாரிப்பு நிறுவனம் ஒன்று இந்தியாவில் அறிமுகம் செய்திருக்கின்றது. இந்த ஸ்கூட்டர் பற்றிய இன்னும் பல முக்கிய தகவல்களை இந்த பதிவில் வழங்கியிருக்கின்றோம்.  மிதிவண்டிகள், ரிக்ஷாக்கள், மூன்று சக்கர ட்ரே-சைக்கிள்கள் மற்றும் பைக்குகள் ஆகிய ஐசிஇ எஞ்ஜின் கொண்ட வாகனங்களை மின்சார வாகனமாக மாற்றும் நிறுவனமே ராஜ் எலெக்ட்ரோமோட்டீவ்ஸ். இந்த பிரிவில் மிகவும் கைதேர்ந்த நிறுவனமாக அது செயல்பட்டு வருகின்றது. இந்த நிலையில், மின் வாகன உற்பத்தியிலும் களமிறங்கும் வகையில் நிறுவனத்தால் தொடங்கப்பட்ட மற்றுமொரு நிறுவனமாக க்ரெட்டா எனும் புதிய பிராண்ட். இந்த நிறுவனத்தின் வாயிலாக தற்போது புதிய மாடல் மின்சார ஸ்கூட்டர்களை ராஜ் எலெக்ட்ரோமோட்டீவ்ஸ் உற்பத்தி செய்திருக்கின்றன. அவற்றை இந்திய மின்சார வாகன சந்தையில் க்ரெட்டா பிராண்டின்கீழ் தற்போது விற்பனைக்கு அறிமுகமும் செய்திருக்கின்றது. ஒட்டுமொத்தமாக நான்கு இ-ஸ்கூட்டர் மாடல்...

நேர்மையாக மட்டும் எடுத்திருந்தால்.. ஜெய்பீம் வேற லெவல்

Image
  நேர்மையாக மட்டும் எடுத்திருந்தால்.. ஜெய்பீம் வேற லெவல் படம்.. லட்சுமி ராமகிருஷ்ணன் ஜெய் பீம் படத்தின் உண்மைக் கதையை நேர்மையாக எடுத்திருந்திருக்கலாம். ஆனால் படம் எடுத்தவர்கள் அதை செய்யவில்லை என இயக்குநர் லட்சுமி ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார் நடிகர் சூர்யா நடித்து ஓடிடியில் ரிலீஸான ஜெய்பீம் படத்தில் ஒரு காட்சியில் வன்னியர்களின் அடையாளமான அக்னி கலசம் காட்டப்பட்டதாக வன்னியர் சங்கத்தினர் படக்குழுவினருக்கு கண்டனம் தெரிவித்துள்ளது. அது போல் உண்மைக்கதையில் இன்ஸ்பெக்டரின் பெயர் வேறு மதத்தினரின் பெயராக இருக்கும் நிலையில் படத்தில் அவருக்கு குருமூர்த்தி என சூட்டப்பட்டுள்ளது. இதற்கு காடுவெட்டி குருவின் மகன் கனலரசன் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ஜெய்பீம் படத்தில் எதிர்ப்புக் கிளம்பிய அந்த காட்சியில் ஒரு காலண்டர் குறிப்பிட்ட சமூகத்தினரை சேர்ந்தது என்பது எங்களுக்கு தோன்றவில்லை என இயக்குநர் ஞானவேல் வருத்தம் தெரிவித்திருந்தார். ஆனால் குருமூர்த்தி கேரக்டர் குறித்து அவர் எதையும் கூறவில்லை இதுகுறித்து நடிகையும் இயக்குநருமான லட்சுமி ராமகிருஷ்ணன் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில் ஜெய்பீம் படத்தி...

கோதுமை இட்லி செய்வது எப்படி?

Image
  அரிசி தேவையே இல்லை... கோதுமை இட்லி செய்வது எப்படி? கோதுமையில் ரொட்டி, சப்பாத்தி, பூரி செய்து ருசித்திருப்போம். மிஞ்சிப்போனால் கோதுமை தோசை செய்திருப்போம். ஆனால் இட்லி சுடுவது பலரும் அறியாத ஒன்றாக இருக்கும். இன்று எப்படி கோதுமை இட்லி செய்வது என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் கோதுமை-  300 கிராம் உளுந்தம் பருப்பு - 75 கிராம் செய்முறை கோதுமையை 1 மணி நேரம் ஊற வைத்து நன்றாக ஆட்ட வேண்டும். உளுந்தம் மாவையும் நன்றாக வெண்ணெய் போல் ஆட்டிஉப்பு சேர்த்து பிசைந்து வைக்கவும். 8 மணி நேரம் வைத்த பின் இட்லியோ, தோசையோ சுடலாம். கோதுமை இட்லி போன்று தீட்டிய கம்பு, கேப்பைகளிலும் மாவு ஆட்டி இட்லி, தோசை போடலாம். இவை மிருதுவாகவும், ருசியாகவும் இருக்கும். இவைகளுடன் காய்கறி சேர்த்தும் காய்கறி இட்லி தயார் செய்யலாம்.   

செம கடுப்பில் ரசிகர்கள் அண்ணாத்த திரைப்படம்,

Image
  ரிலீஸாகி 21 தினங்களில் OTT-யில் வெளியான அண்ணாத்த திரைப்படம், செம கடுப்பில் ரசிகர்கள் இயக்குனர் சிவா இயக்கத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியான திரைப்படம் அண்ணாத்த. பெரிய எதிர்பார்ப்பிற்கு பின் உலகம் முழுவதும் வெளியான இப்படம் அனைவரிடமும் எதிர்மறையான விமரசங்களையே பெற்றது.ஒரு தோல்விப்படமாக ரஜனீக்கு அமைந்துவிட்டது ஆனால் அண்ணாத்த திரைப்படத்தை அவர்  ரசிகர்கள் அனைவரும் கொண்டாடினர் என்றே கூறலாம்.  வெளிநாட்டு வசூலில் அண்ணாத்த திரைப்படம் சொதப்பிவிட்டது  தமிழகத்தில் ஒரளவு  வசூலையே பெற்றுள்ளது. இதனிடையே அண்ணாத்த திரைப்படம் வெளியாகி 21 நாட்களே ஆகியுள்ள நிலையில் தற்போது அப்படம் Netflix மற்றும் Sun NXT-யில் வெளியாகியுள்ளது. திரையரங்கில் ஓடிக்கொண்டு இருக்கும்போதே OTT தளத்தில் அண்ணாத்த திரைப்படம் வெளியாகியுள்ளதால், ரஜினியின் ரசிகர்கள் செம கடுப்பாகியுள்ளனர். 

புரூஸ் லீ

Image
  புரூஸ் லீ பிறந்த தினம் இன்று! *************************** 1959 ஆம் ஆண்டு சராசரிக்கும் குறைவான உயரத்தோடும், ஒல்லியான தேகத்தோடும் அமெரிக்க மண்ணில் வந்திறங்கினான் அந்த 18 வயது இளைஞன். அப்போது ஜான் வேய்ங், ஜேம்ஸ் டீன், சார்ல்ஸ் அட்லஸ் போன்ற நடிகர்கள் புகழின் உச்சியில் இருந்தனர். ஆனால் பார்ப்பதற்கு சாதாரணமாக இருந்த அந்த இளைஞன் என்ன சொன்னான் தெரியுமா? அந்த ஆக்‌ஷன் கதாநாயகர்களுக்கெல்லாம் இனி நான்தான் மாற்று என துணிந்து சொன்னான். அப்போது அமெரிக்கர்கள் மட்டுமல்ல அந்த இளைஞனின் சமூகம்கூட அவனை ஏளனமாக பார்த்தது. ஆனால் ஏளனங்களை ஏணிப்படிகளாக்கி அடுத்த 14 ஆண்டுகளில் வெற்றிக்கொடி நாட்டி சினிமா என்ற வாகனத்தின்மூலம் தற்காப்புக்கலைக்கு உலகலாவிய அங்கீகாரம் பெற்றுத்தந்தார் அந்த தற்காப்புக்கலை வல்லுநர் திரைப்பட நடிகர். அவரது பெயர் புரூஸ் லீ. 1940 ஆம் ஆண்டு நவம்பர் 27 ந்தேதி அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ மாநிலத்தில் பிறந்தார் புரூஸ் லீ. பிறந்தபோது அவருக்கு இடப்பட்ட பெயர் லீ ஜுன்பேன்' அவரது தந்தை லீ கோய்ன் ஒரு சீனர், தாயார் கிரேஸ் ஐரோப்பியர். சிறுவயதில் ஹாங்காங்கில் வாழ்ந்தது புரூஸ் லீயின் குடும்பம். ...

வெள்ள ஆபத்து

Image
  வெள்ள ஆபத்து  தொடர்ந்து வரும் மழை தண்ணீர்மழை விட்டும்  ஏந்த நடவடிக்கை இல்லை  பால். தண்ணீர் கிடைக்க பெறாமல் மக்கள் அவதி  கொளத்தூர்  Pooombugar nagar second main road.  Chennai  600099 உடனே நடவடிக்கை எடுத்து மழை தண்ணீர் அகற்ற மக்கள் கோரிக்கை