Posts

பரிதாபம் .ஊட்டியில் காக்கவைக்கப்பட்ட சுற்றுலாப் பயணிகள்!

Image
  ஆளுநர் வருகை... ஊட்டியில் காக்கவைக்கப்பட்ட சுற்றுலாப் பயணிகள்!  நீலகிரி மாவட்டம் ஊட்டியில் உள்ள ஆளுநர் மாளிகைக்கு தமிழக ஆளுநர் ரவி கடந்த 23-ம் தேதி வந்தார். அவர் வருகையின் போது, ஆளுநர் மாளிகை அமைந்துள்ள அரசு தாவரவியல் பூங்காவை சுற்றியுள்ள கடைகளை அடைக்கச் செய்த போலீஸார் 45 நிமிடம், சுற்றுலாப் பயணிகளையும் பூங்காவுக்குள் நுழைய விடாமல் தடுத்தனர்.

புகழ்பெற்ற இந்திய ஓவியர் ராஜா ரவி வர்மா

Image
  இன்று புகழ்பெற்ற இந்திய ஓவியர் ராஜா ரவி வர்மாவின் பிறந்த நாள் (ஏப்ரல் 29, 1848) நவீன காலத்துக்கு ஏற்ற முறையில் மேல்நாட்டில் வழங்கும் ஓவிய மரபை அப்படியே இந்தியப் பாணி ஓவியக்கலைக்குள் புகுத்தியவர். மேலை நாட்டு உத்தியான தைல வண்ணத்தை பயன்படுத்தி எண்ணற்ற ஒவியங்கள் வரைந்தார். இப்பாணியில் அவர் உலகப்புகழ் பெற்ற பல ஓவியங்களைப் படைத்தார் ! ரவி வர்மா தென்னிந்தியப் பெண்களின் சாயலில் இந்துக் கடவுள்களை உருவகப்படுத்தி தனது ஓவியங்களை படைத்தார். பழம்பெரும் காவிய நாயகிகளான துஷ்யந்தை, சகுந்தலை, தமயந்தி போன்றோரின் உருவகங்களை வரைந்து உலகப்புகழ் பெற்றார். "நவம்பர் 24 2002 இல் டில்லியில் நடந்த ஓவிய ஏலத்தில் அவரது யசோதையும் கிருஷ்ணனும் ஓவியம் 56 லட்சம் ரூபாய்க்கு ஏலம் போனது. 1873 இல் வியென்னாவில் நடைபெற்ற ஓவியக் கண்காட்சியில் ரவிவர்மாவின் ஓவியங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டு சிறப்பு விருதைப் பெற்றார்

பாவேந்தர்" பாரதிதாசன்

Image
 பாவேந்தர்" பாரதிதாசன் அவர்களின் பிறந்த நாளான இன்று அம் மாமனிதனை நினைவு கொள்வோம். " தமிழுக்கும் அமுதென்று பேர் அந்த தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்"  என்று தேன்சுவை சொட்டும், வைர வரிகளை எழுதியவர்  பாவேந்தர் பாரதிதாசன் அவர்கள்.  இவர் 1891 ஆம் ஆண்டு, ஏப்ரல் திங்கள் 29ஆம் நாள் புதுவையில் பிறந்தார், இவரது இயற்பெயர் கனகசுப்புரத்தினம். புதுவையில் பிரெஞ்சுக்காரர்களின் ஆதிக்கம் இருந்ததால், பிரெஞ்சு பள்ளியிலே ஆரம்பக் கல்வி பயின்றார்.  தமிழ் மொழியில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்ததால், தமிழ் இலக்கணம்,  இலக்கியம் மற்றும் சைவ சித்தாந்த வேதங்களை முறையாக கற்றுத் தேறினார்.   தனது 16வது வயதில், புதுவை கல்லூரியில் தமிழ் படித்தவர், பின்னர் காரைக்கால் அரசினர் கல்லூரியில் தமிழாசிரியர் ஆனார்.   தனது மானசீக குருவாக, மகாகவி சுப்பிரமணிய பாரதியாரை ஏற்றுக்கொண்டதால் அதன் அன்பு அடையாளமாக, தனது பெயரை பாரதிதாசன் என  மாற்றிக் கொண்டார்.   தமிழ் மொழிக்கு அருந்தொண்டாற்றி கவிதை, கட்டுரைகளை எழுதுவதில்  தனித் திறமை பெற்றுத் திகழ்ந்தார்.   ...

சர்வதேச நடன தினமின்று!

Image
  சர்வதேச நடன தினமின்று! நடனக் கலைஞர்களின் சேவையை கௌரவிக்கும் பொருட்டு யுனேஸ்கோ, சர்வதேச நடன கவுன்சிலுடன் இணைந்து உலக நடன தினத்தை ஏப்ரல் 29ம் தேதி கொண்டாடி வருகிறது. இது, நடனக் கலைஞர் ஜான் ஜார்ஜ் நூவர் என்பவரின் பிறந்த தினம் ஆகும். பிரெஞ்ச் நடனக்கலைஞரான இவர் பாலே நடனக் கலையில் சிறந்து விளங்கியவர். இதையொட்டி சில நடனக் குறிப்புச் செய்திகள் நடனம் என்பது பொதுவாகத் தாளத்துக்கும் இசைக்கும் அமைவாக உடலை அசைத்து நிகழ்த்தப்படும் ஒரு கலை வடிவம். நடனங்கள் சமயச் சார்பு நோக்கங்களுக்காக ஆடப்படுபவையாக அல்லது பிறருக்கு நிகழ்த்திக் காட்டும் ஒன்றாக அமையக்கூடும். நடனம் என்பது எவ்வெவற்றை உள்ளடக்கியது என்பது குறித்துச் சமூக, பண்பாட்டு, அழகியல், கலை, நெறிமுறைகள் போன்றவற்றின் எல்லைகளுக்குள்ளேயே விளக்கமுடியும். சில நாட்டுப்புற நடனங்கள் பயன்பாட்டுத்தன்மை கொண்ட அசைவுகளை உள்ளடக்கியிருக்க, பலே, பரதநாட்டியம் போன்ற நடனங்கள் பலவகையான கலை நுணுக்கங்களை உட்படுத்தியவையாக உள்ளன. துக்கமும் கொண்டாட்டமாக மாறும் கலை, நடனத்தில் மட்டுமே சாத்தியம். உலகம் முழுவதும் பல்வேறு நடனங்கள் இருக்கின்றன. அந்தந்த நாட்டுக்கான பாரம்பரிய ம...

பிரபல ஓவியர் கோபுலு

Image
 இன்று தூரிகை உலகின் பீஷ்மர் என்று அறியப்பட்ட பிரபல ஓவியர் கோபுலு நினைவு நாள். இவரது இயற் பெயர் கோபாலன். தஞ்சாவூரில் பிறந்தவர். இளம் வயதில் ஓவியத்தின் மீதான ஆர்வத்தால், குடந்தை ஓவியக் கல்லூரியில் சேர்ந்தார். ஓவியர் மாலியின் ஓவியங்களால் கவரப்பட்டு, அவரைக் குருவாக ஏற்றுக்கொண்டார். 1941 இல் மாலியை சந்தித்து, அவரது ஆதரவில் வளர்ந்து ஓவியரானார். திருவையாறு தியாகராயரின் வீட்டில், அவர் பூசை செய்த இராமர் பட்டாபிசேகப் படத்தை அங்கிருந்தே நேரடியாக வரையச்சொன்னார் மாலி. 1942ஆம் ஆண்டு ஆனந்த விகடன் தீபாவளி மலரில் இந்த ஓவியம் இடம்பெற்றது. கோபாலனை கோபுலுவாக்கினார் மாலி. 1945 முதல் ஆனந்த விகடனில் முழுநேர ஓவியப் பணியின் அமர்ந்தார். தேவனின் துப்பறியும் சாம்பு சித்திரக் கதைகளுக்கும் அவரது ஏனைய புதினங்களுக்கும் ஓவியங்கள் வரைந்தார். கொத்தமங்கலம் சுப்புவின் தில்லானா மோகனாம்பாள் புதினத்துக்கு ஓவியங்கள் வரைந்து உயிரூட்டினார். சாவியின் வாஷிங்டனில் திருமணம் தொடருக்கு உயிரோட்டமுள்ள கேரிகேச்சர்-களை வரைந்து புகழ்பெற்றார். எழுத்தாளர் சாவி எழுதிய பயண இலக்கியத் தொடருக்காக அவருடன் இணைந்து அஜந்தா குகைகள், எல்லோரா, தில...

புதிய எலக்ட்ரிக் பைக்குகளை அறிமுகம் செய்ய தடை

Image
 புதிய எலக்ட்ரிக் பைக்குகளை அறிமுகம் செய்ய தடை.. மத்திய அரசு தடை..! பெட்ரோல், டீசல் விலை உயர்வின் காரணமாக இந்தியாவில் எலக்ட்ரிக் வாகனங்களுக்கான டிமாண்ட் மிகவும் அதிகமாக இருக்கும் நிலையில் எலக்ட்ரிக் இரு சக்கர வாகனங்கள் தீ பிடித்து எறிவது அதிர்ச்சியைக் கொடுத்தது. எல்க்ட்ரிக் வாகனங்கள் தீப்பிடித்து எறியும் சம்பவம் அடுத்தடுத்து நிகழ்ந்த காரணத்தால் மத்திய அரசு முக்கியமான முடிவுகளையும், கட்டுப்பாடுகளையும் அவசரமாக விதிக்க வேண்டிய கட்டாயத்தில் தள்ளப்பட்டு உள்ளது. 3 லாபகரமான ஆட்டோமொபைல் பங்குகள்.. வாங்கி வைக்கலாம்.. நிபுணர்களின் செம பரிந்துரை! இந்த நிலையில் மத்திய அரசு எலக்ட்ரிக் இரு சக்கர வாகன உற்பத்தி நிறுவனங்களுக்கு முக்கியமான உத்தரவை வெளியிட்டுள்ளது. எலக்ட்ரிக் வாகனங்கள் மத்திய அரசு இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் எலக்ட்ரிக் வாகனங்கள் தீ பிடித்து எறிந்தது குறித்து முழுமையாக ஆய்வு செய்து முடிவுகள் வரும் வரையில் புதிய வாகனங்களை அறிமுகம் செய்ய வேண்டாம் என எலக்ட்ரிக் இரு சக்கர வாகன நிறுவனங்களுக்கு உத்தரவிட்டு உள்ளது. புதிய வாகன அறிமுகத்திற்குத் தடை எலக்ட்ரிக் இரு சக்கர வாகன விபத்துக்கள் கு...

குளியலறையில் மயக்கம்

Image
 குளியலறையில் மயக்கம்  நம்மில் ஆரோக்கியமான பலர் திடீரென குளியலறையில் மயக்கம் போட்டு விழுந்த பிறகு பக்கவாதம் மற்றும் பின் மண்டையில் அடிபட்டு உயிரிழப்பு போன்ற கவலையான செய்திகள் பலவற்றை நாம் அடிக்கடி கேள்விப் படுகிறோம். பெரும்பாலும் குளியலறை தவிர வேறொரு இடத்தில் விழுவதை நாம் ஏன் கேள்விப்படவில்ல? அது போல் குளியலறையில் திடீர் மயக்கம் என்பது நம்முடைய தவறான குளிக்கும் முறையால் வருவதே. பெரும்பாலோர் குளியலறையில் ஷவரைத் திறந்து அல்லது கப்பில் நீரை மொண்டு முதலில் தலையை நனைப்பர்.இது முற்றிலும் தவறான செயல். ஏனென்றால்,அப்படி முதலில் தலையை நனைக்கும்போது,தலை ஈரமாகி குளிர்ச்சியடையும்.அதனால் ​​தலையை சூடாக்க இரத்தம் நம் தலையை நோக்கி வேகமாகப் பாயும். அச்சமயத்தில் இரத்தம் பயணிக்கக்கூடிய நாளங்கள் கழுத்துப் பகுதியில் (ஈரத்தினால்) குறுகினால், அது இரத்த நாளங்களை சிதைப்பதற்கு வாய்ப்புள்ளது. மேலும் மண்டையோட்டினுள் இருக்கும் மூளைக்குச் சென்று கொண்டிருக்கும் ரத்தம்,மண்டையோடு திடீரென குளிர்ச்சியாவதால் ரத்தநாளங்கள் சுருங்கி வெடிப்பதற்கும், மூளைப் பகுதியில் ரத்தம் கசிந்து மயக்கம்,மூளை நரம்புகள் பாதிப்பால் பக...