Posts

ஆவடி மோரை ஊராட்சி கன்னியம்மன் நகரில் கோலாகலமான தைத்திருநாள் கொண்டாட்டம்

Image
 திருவள்ளூர் மாவட்டம் ஆவடி மோரை ஊராட்சி கன்னியம்மன் நகரில் கோலாகலமான தைத்திருநாள் கொண்டாட்டம் ஆவடி.ஜன-15. திருவள்ளூர் மாவட்டம் ஆவடி மோரை ஊராட்சி புதிய கன்னியம்மன் நகரில் உள்ள இனிய உதயம் தொண்டு நிறுவனத்தின் மாலைநேர திறண்வளர் மையத்தில் 14.01.2023 அன்று  காலை 11மணி முதல் மதியம்  2.30 மணி வரை கோலாகலமாக பொங்கல் தைத்திருநாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்த விழாவிற்கு சிறப்பு விருந்தினராக இனிய உதயம் தொண்டு நிறுவனத்தின் தலைமை செயல்பாட்டாளரும் சமூக ஆர்வலருமான அல்லா பகேஷ் அவர்கள் கலந்துக்கொண்டார். இந்த பொங்கல் தின விழாவில் குழந்தைகள் மற்றும் பெற்றோர்கள் புத்தாடை அணிந்து சூரிய பகவானுக்கு பொங்கல் வைத்து, குழந்தைகளின் ஆடல் பாடலுடன் உங்கள் விழா சிறப்பாக நடைபெற்றது. இந்த விழாவில் பொங்கல் கொண்டாடப்படுவதற்கான நோக்கம் என்ன என்பதை பத்தாம் வகுப்பு மாணவி திவ்யதர்ஷினி அருமையாக விளக்கி நிகழ்ச்சியும் தொகுத்து வழங்கினார்.  இந்த விழாவில் குழந்தைகள் புத்துணர்ச்சியுடன் ஆடல் பாடல்கள் நடனமாடி  கூடியிருக்கும் குழந்தைகளுக்கு சந்தோசத்தை கொடுத்தனர். முன்னதாக குழந்தைகளுக்கும், பெற்றோர்களுக்கு...

நீங்கள் உங்களது மொபைல் போனிலிருந்தே எத்தனை டிவைஸ்களில் உங்கள் வாட்ஸ் அப் இயங்கிக் கொண்டிருக்கிறது என்பது கண்டறிய முடியும்.

Image
 அடி தூள்..! இனி ஒரே வாட்ஸ் அப்பை இரண்டு டிவைஸ்களில் பயன்படுத்தலாம்..! ஒரே வாட்ஸ் அப்பை இரண்டு டிவைஸ்களில் பயன்படுத்தலாம்..! நீங்கள் உங்களது மொபைல் போனிலிருந்தே எத்தனை டிவைஸ்களில் உங்கள் வாட்ஸ் அப் இயங்கிக் கொண்டிருக்கிறது என்பது கண்டறிய முடியும். இந்தியாவில் அதிக மக்கள் பயன்படுத்தும் செயலிகளில்முன்னிலையில் இருப்பது வாட்ஸ் அப் செயலியாகும். தகவல்களை பரிமாறக் கொள்ள உதவும் இந்த செயலியில் மெட்டா நிறுவனம் அவ்வபோது புதிய புதிய அப்டேட்டுகளை கொடுத்து வாடிக்கையாளர்களை மகிழ்வித்து வருகிறது. சமீபத்தில் குரூப் வீடியோ கால், வாட்ஸ் அப் கம்யூனிட்டி, குழுவாக கால் பேசும் போது தனிப்பட்ட நபரை மியூட் செய்யும் வசதி போன்ற பல்வேறு புதிய வசதிகளை அறிமுகப்படுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது. அது போலவே தற்போதும் புதிய அப்டேட் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது ஒரே எண்ணில் இயங்கும் வாட்ஸ் அப்பை, இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட வெவ்வேறு டிவைஸ்களில் பயன்படுத்த முடியும். இது போல ஒரு வசதி ஏற்கனவே வாட்ஸ் அப்பில் இருந்தாலும், அதனை சற்று விரிவுபடுத்தி புதிய அம்சங்களை சேர்த்து ஒரு சரியான பேக்கேஜாக கொடுத்துள்ளது அந்நிறுவனம். ...

ஆச்சரியமூட்டும் 'வெள்ளாவி' பொங்கல்

Image
 ஆச்சரியமூட்டும் 'வெள்ளாவி' பொங்கல் நம் அனைவருக்கும், பொங்கல் பண்டிகை தெரியும். அந்த விழாவின் போது வைக்கப்படும் வெண் பொங்கல், சர்க்கரைப் பொங்கல், கருப்பட்டி பொங்கல் கூட தெரியும். ஆனால் ‘வெள்ளாவி பொங்கல்’ பற்றி உங்களுக்குத் தெரியுமா? வெள்ளாவி பொங்கலை பற்றி தெரிய வேண்டும் என்றால், முதலில் 'வெள்ளாவி'யை பற்றி தெரிந்திருக்க வேண்டும். 'வெள்ளாவியில் வைத்து வெளுத்தல்' என்பது, சலவைத் தொழிலாளர்களிடம் பழங்காலம் தொட்டே தொடரும் ஒரு தொழில்நுட்ப முறை. பருத்தி ஆடைகளை பளபளவென வெளுக்கவும், கறை படிந்து இருந்தால் அந்த கறைகள் இருந்த சுவடே தெரியாமல் அகற்றவும் பயன்படுத்தும் யுக்திதான் வெள்ளாவி போடுதல். இதற்கு பயன்படுத்தும் மண்பானைக்கு 'வெள்ளாவி பானை' என்று பெயர். கற்கள் அடுக்கி அடுப்பு செய்து, அதன் மேல் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட பானைகளை வைத்து மண்ணால் பூசுவார்கள். கீழே அடுப்பு எரிய வைக்க இடைவெளி அமைத்து, மேலே நெருப்பு வெளியே வர முடியாத அளவுக்கு இடைவெளியின்றி பானைகளின் இடையே மண் பூசப்படும். அந்தப் பானைகளில் நீர் நிரப்பி வைத்து, அதற்கு மேல் காரம் போடப்பட்ட துணிகளை சுற்றிச் சு...

: உலகமே கொண்டாடும் சூரிய வழிபாடு

Image
 : உலகமே கொண்டாடும் சூரிய வழிபாடு ஏழு குதிரைகள் பூட்டப்பட்டதும், ஒரு சக்கரம் மட்டுமே கொண்டதுமான தேரில் ஏறி பவனி வருவதாக கருதப்படும் சூரிய பகவானுக்கு, ஆதித்தன், ஆதவன், ஞாயிறு, பரிதி, பகலவன், உதயன், இரவி, சவிதா, திவாகரன், கதிரவன் என்று பல பெயர்கள் உண்டு. வான சாஸ்திரத்தில் சிறந்து விளங்கிய பழங்கால இந்தியர்கள், சூரியன் பற்றிய அறிவியல்பூர்வமான செய்திகளை பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே அறிந்து இருந்தனர். சூரியக்கதிர், ஒளிச்சிதறலுக்கு உள்ளாகும்போது, அது ஆங்கிலத்தில் 'விப்ஜியார்' என்று கூறப்படும் ஏழு விதமான நிற மாலையாக காட்சி அளிக்கிறது. இதனால்தான், சூரியன் ஏழு குதிரைகளைப் பூட்டிய தேரில் சுற்றி வருவதாக அவர்கள் உருவகப்படுத்தினார்கள். அனைத்து கிரகங்களில் சூரியன் மட்டுமே நிலையாக ஒரே இடத்தில் இருக்கிறது என்றும், மற்ற கிரகங்கள்தான் சூரியனைச் சுற்றி வருகின்றன என்றும் அறிவியல் கூறுகிறது. அறிவியலின் இந்த கண்டுபிடிப்பை, முன்னதாகவே அறிந்து இருந்த இந்தியாவின் பழங்கால வானசாஸ்திர நிபுணர்கள், 'சூரியன் உதிப்பதும் இல்லை; அஸ்தமிப்பதும் இல்லை' என்று உறுதிபட கூறினார்கள். அவர்களது இந்த வாசகம், கி.மு. ...

தமிழ்நாட்டில் உள்ள கூட்டுறவு வங்கிகளை ஹேக் செய்து கொள்ளையடித்த நைஜீரிய பொறியாளர்கள் -

Image
: தமிழ்நாட்டில் உள்ள கூட்டுறவு வங்கிகளை ஹேக் செய்து கொள்ளையடித்த நைஜீரிய பொறியாளர்கள் - நைஜீரியாவைச் சேர்ந்த இரண்டு கணினி பொறியாளர்கள் தமிழ்நாட்டு கூட்டுறவு வங்கி உள்பட இந்தியாவில் பல வங்கி கணக்குகளை ஹேக் செய்து, சுமார் இரண்டு கோடி வரை கொள்ளையடித்து தங்கள் நாட்டுக்கு பணத்தை அனுப்பியுள்ளதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளனர். இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் உள்ள வங்கிகளில் பணத்தை கொள்ளையடிப்பதற்காக கீ லாகர் என்ற மென்பொருளை இவர்கள் பயன்படுத்தியதாகவும் போலீசார் குற்றம்சாட்டுகின்றனர். கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் உள்ள வங்கிகளுக்கு ஈமெயில் அனுப்பி, அந்த ஈமெயிலை வங்கி அதிகாரிகள் கிளிக் செய்தவுடன், அந்த வங்கி கிளையில் உள்ள கணக்கு விவரங்கள், பயன்படுத்தப்படும் பாஸ்வேர்ட் உள்ளட்டிவற்றை ஹேக் செய்துள்ளனர் என்கிறார்கள் அதிகாரிகள். பிபிசி தமிழிடம் பேசிய சைபர் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் வினோத் குமார், தனது குழுவினருடன் பத்து நாட்கள் டெல்லியில் தங்கியிருந்து இருவரையும் கைது செய்ததாக தெரிவித்தார். வங்கி கொள்ளை நடைபெற்ற விதம் பற்றி பேசுகையில், எகென் காட்வின் (37), சி அகஸ்டின் (42) ஆ...

சூரியனை வழிபடுவோம் வளம் பெறுவோம்!

Image
 சூரியனை வழிபடுவோம் வளம் பெறுவோம்! இந்திய கலாசாரத்தில் சூரிய வழிபாடு என்பது மிகவும் முக்கிய நிகழ்வாக கடைப்பிடிக்கப்படுகிறது. இன்று சூரியனிலுள்ள திவ்ய சக்தியை அறிவியல் ஆராய்ச்சியினர் ஆராய்ந்து வருகிறார்கள். ஆனால் இதனை நம் வேத கலாசாரம் பல யுகங்களுக்கு முன்பாகவே கண்டுபிடித்துவிட்டது. சூரியனை நாம் ஆதித்யன், சூரியன், ரவி, மித்ரன், பானு, பகன், பூஷா, அர்யமன், மரீசி, அர்கன், பாஸ்கரன், பிரபாகரன், மார்த்தாண்டன் என பல பெயர்கள் ெகாண்டு அழைக்கிறோம். இவ்வாறு அழைக்கப்படும் சூரியனின் பெயர்கள் மந்திரங்களாக உபாசனை செய்யப்படுகின்றன. சூரிய சக்தி பூமியின் மேல் படரும் போது அந்தந்த உயிர்களின் உடலின் தேவைக்கேற்ப வெவ்வேறு விதமாக கிரகிக்கப்படுகிறது. சூரியனை ‘சப்தாஸ்வரத  மாரூடம்’ என்ற நாமத்தால் துதிப்பது வழக்கம். ‘ஏழு குதிரைகள் பூட்டிய  ரதத்தின் மேல் சூரிய பகவான் பவனி வருவான்’ என்பது வர்ணனை. ‘‘ரம்ஹண சீலத்வாத் ரத:’’- நகரும் லட்சணம் கொண்டது ரதம். ‘பாய்வது’  ஒளியின் குணம். ஒளிக்கு மூலமானவன் பிரபாகரன். அஸ்வம் என்றால் ‘ஒளிக்கதிர்’ என்று பொருள். அஸூ வ்யாப்தௌ… சீக்கிரத்தில் வியாபிக்கும் குணம் கொண்டது...

மாட்டுக்கு மரியாதை

Image
 மாட்டுக்கு மரியாதை * 'மாடு' என்ற சொல்லுக்கே செல்வம் என்றுதான் பொருள். "கேடுஇல் விழுச்செல்வம் கல்வி  ஒருவற்கு மாடுஅல்ல  மற்றை யவை." என்ற  குறளில் 'மாடு' என்ற சொல்லைச் செல்வம் என்ற பொருளில்தான் வள்ளுவர் ஆண்டிருக்கிறார்.  பழங்காலத்தில் ஒரு நாட்டோடு போர் தொடுக்க விரும்பும் எதிரி நாட்டினர் முதலில் அந்நாட்டின் ஆநிரைகளைத்தான் கவர்ந்து செல்வர். மாடுகளைக் கவர்ந்து செல்வது மானப் பிரச்சனை. உடனே போர் தொடங்கும். அசையாச் சொத்துக்கள் ஆயிரம் இருந்தும் அந்தரங்கத்தில் வறுமையில் வாடிய பணக்கார ஏழைகள் பலர் உண்டு. அசையும் சொத்தான மாடு ஒன்று இருந்தால் கூடப் போதும்.  அன்றாடச் செலவுக்கு யாரிடமும் கையேந்த வேண்டிய அவசியமில்லை.  ஒரு வீட்டை ஒரு மாடு கவனித்துக் கொள்ளும்.  குடும்பத் தலைவனுக்கு நிகரான பாத்திரத்தை மாடுகள்  ஏற்றுக்கொண்டன. 'ஏறு தழுவுதல்' பழந்தமிழர்ப் பண்பாடு. அதனால்தான் 'ஜல்லிக்கட்டு' தடை செய்யப்பட்டபோது நாடே திரண்டு போராடி  அவ்வுரிமையை மீட்டது. 'புதுமனைப் புகுவிழா'வில் மாடும் கன்றுமாக இல்லத்தினர் குடிபுகுவது மங்கலம் எனப்பட்டது. நன்றாக உழைப்பவனை 'மா...