Posts

<no title>

கொல்கத்தா: மேற்கு வங்காள மாநிலத்தில், பிர்பம் நகரை சேர்ந்தவர் அந்தப் பெண். 30 வயது. கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பாக அவருக்கு ஒரு ஆணுடன் திருமணம் நடந்தது. இருவரும் இத்தனை ஆண்டுகளாக இனிய மணவாழ்க்கையை நடத்தி வந்திருக்கிறார்கள். இந்நிலையில் அந்தப் பெண், அடிவயிற்றில் கடுமையான வலியால் அவதிப்பட்டு வந்தார். இதற்கு சிகிச்சை பெறுவதற்காக அவர் கொல்கத்தா நகரத்தில் உள்ள நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் புற்றுநோய் ஆஸ்பத்திரிக்கு சென்றார். அங்கு அவருக்கு புற்று நோய் மருத்துவ நிபுணர் டாக்டர் அனுபம் தத்தாவும், புற்றுநோய் அறுவை சிகிச்சை மருத்துவ நிபுணர் டாக்டர் சமன்தாசும் மருத்துவ பரிசோதனைகள் நடத்தினர். அதில் இதுவரை பெண்ணாக தோன்றி வந்த அந்த பெண், பெண்ணே அல்ல, ஆண் என கண்டறிந்து அதிர்ச்சியில் உறைந்து போயினர். அவருக்கு பெண்ணுக்குரிய உடல் உறுப்புகள் இருந்தன. அவரது குரலும் பெண் குரல்தான். ஆனால் அவருக்கு பிறப்பிலேயே கருப்பையும், சினைப்பைகளும் இல்லை என்பதை டாக்டர்கள் கண்டறிந்தனர். அந்தப் பெண்ணுக்கு மாதவிலக்கும் வந்தது இல்லையாம். இதுபற்றி டாக்டர் அனுபம் தத்தா கூறியதாவது:- இவ...

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வகையில், 15 மூலிகைகளை கொண்டு தயாரித்த இனிப்பு வகைகள்

Image
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வகையில், 15 மூலிகைகளை கொண்டு தயாரித்த இனிப்பு வகைகள்: கொல்கத்தாவில் அறிமுகம்         உலகை ஆட்டிப்படைத்து வரும் கொரோனாவை தடுக்க ஒவ்வொரு நாட்டினரும் பல்வேறு தடுப்பு முறைகளை கையாண்டு வருகின்றனர். கொரோனாவை எதிர்த்து போராடுவதற்கு நோய் எதிர்ப்பு சக்தி மட்டுமே ஒரே வழியாக கருதப்படுகிறது. மருந்து எதுவும் இதுவரை இல்லாத நிலையில்,நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் உள்ள உணவுகள், மூலிகைகளை எடுத்துக்கொள்ள தமிழக அரசு அறிவுரை வழங்கி வருகிறது. இந்நிலையில், மேற்கு வங்காள மாநிலம் கொல்கத்தாவைச் சேர்ந்த ஒரு ஸ்வீட் ஸ்டால் உரிமையாளர், தனது வாடிக்கையாளர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் இனிப்பு வகைகளை தயாரித்து விற்பனை செய்து வருகிறார்.  

ஆத்தி சூடி            (நீ)           * நீர் விளையாடேல்

Image
ஆத்தி சூடி            (நீ)           * நீர் விளையாடேல்           *         ஒருவிகற்ப         இன்னிசை          வெண்பா             *  ஒலி ஒளி  உணர  வெள்ளம்   பெருகி     விகிர்தம்       (அச்சம்)       விளைத்திடில்  உள்ளம்   உசுப்பும்     உகல்தல்       (தாவுதல்)      தவிர்த்திட  கொள்ளும்   நலத்தால்    குலமும்      தழைத்திட  துள்ளும்    வினையைத்      துரத்து.            * வணக்கத்துடன்🙏 ச.பொன்மணி

இவரைத் தெரிந்து கொள்வோம் ஆர்ட் இந்தியா ஓவியன் என்கிற நா,.ரவிச்சந்திரன்

Image
இவரைத் தெரிந்து கொள்வோம் ஆர்ட் இந்தியா ஓவியன் என்கிற நா,.ரவிச்சந்திரன்              ஆதிமனிதன் பாறைகளில் வரைந்தான். அதன் பின் மணல் ,காகிதத்தில் வரைந்தான். தற்போது டிஜிட்டலாக கணினியில் வரைய துவங்கிவிட்டான். ஒரு கலையை நாம் யாருக்கும் கற்று கொடுக்க முடியாது. கலை என்பது இயற்கையானது. அது ஒவ்வொருவருக்கு உள்ளேயும் விதைக்கப்பட்டிருக்கிறது. அதை மெருகேற்ற மட்டுமே முடியும். அதில் ஓவியக்கலை உயர்ந்தது. தற்போதைய காலகட்டத்தில் டிஜிட்டல் ஓவியங்களின் முக்கியத்துவத்தை நாம் அனைவரும் அறிவோம். அந்த வகையில் தற்போது டிஜிட்டல் ஓவியத்தில் வித்தியாசமான முறையில் கலக்கி வரும் நெய்வேலி நா. ரவிச்சந்திரன் அவர்களை பற்றி இன்று தெரிந்து கொள்வோம்      இவர் கடலூர்  மாவட்டம், விருத்தாச்சலம் தாலுகா, தெற்கிருப்பு என்கிற ஒரு சிறு கிராமத்தில் விவசாய குடும்பத்தில் பிறந்தாலும் இவரது குடும்பம் அருகிலுள்ள நெய்வேலி டவுன்ஷிப்பில் குடியேறிவிட்டது . இவரது பள்ளிப்படிப்பு மேல்நிலை வரை நெய்வேலி டவுன்ஷிப்பில்தான்  படிப்புடன்  இவர்  ஆர்வம் ஒவியத்தில் அதிகமாக இருந்ததத...

சிலம்புச் செல்வர்  ம. பொ. சிவஞானம்

Image
சிலம்புச் செல்வர்   ம. பொ. சிவஞானம்   தமிழ்த்தேசத் தந்தை என அழைக்கப்படும் . பொ . சிவஞானம்  ( சூன் 26 ,  1906   பிறந்வர் 1956ஆம் ஆண்டில், தமிழர்களுக்கென தமிழ்நாடு தனி மாநிலம் படைத்ததால் தமிழ்த்தேசத் தந்தையாக போற்றப்படுபவர் ம.பொ.சிவஞானம் ஆவார் . தமிழகத்தைச் சேர்ந்தவர்களில் இவர் ஒரு முக்கிய  இந்திய விடுதலைப் போராட்ட வீரரும் சிறந்த தமிழறிஞரும் ஆவார். இவர்  ம . பொ . சி .  என அறியப்படுபவர்.          ம.பொ.சி. இந்த மூன்றெழுத்துக்கு அபூர்வமான காந்த சக்தி உண்டு. சுமார் ஐம்பது அறுபது ஆண்டுகளுக்கு முன்பு, தமிழ்நாடு அரசியலிலும் சரி, இலக்கிய உலகிலும் சரி இந்த மூன்றெழுத்து மனிதர் செய்த சாதனைகள் அபாரமானவை. இவரிடம் என்ன காந்த சக்தியா இருந்தது? அன்றைய தமிழ் உணர்வுள்ள இளைஞர்களை இவர் அப்படி கவர்ந்திழுத்து வைத்துக் கொண்டார். அவர் மேடைப் பேச்சை, அப்படியே பதிவு செய்து அச்சிட்டால், ஒரு சிறிதுகூட இலக்கணப் பிழையின்றி, சொற்றொடர் அழகாக அமைந்து, வாய்விட்டுப் படிக்க வேண்டுமென்ற ஆர்வத்தைத் தூண்டுவதாக அமைந்திருக்கும். தோற்றத்தில் மட்டுமென்ன? அந்த ஆழ்ந்த...

ஃப்ரூட் சாலட் வித் ஐஸ்கிரீம்

Image
ஃப்ரூட் சாலட் வித் ஐஸ்கிரீம் ஜூன் 25, 2020     ஃப்ரூட் சாலட் வித் ஐஸ்கிரீம்   தேவையான பொருட்கள் திராட்சை, ஆப்பிள், மாம்பழம், கொய்யா, கிவி, ஸ்ட்ராபெரி மற்றும் பப்பாளி பழ கலவை,   வெனிலா ஐஸ்கிரீம் – தலா 2 கப். எலுமிச்சை சாறு,   பொடித்த சர்க்கரை – தலா ஒரு தே.க, செய்முறை ஆப்பிள் ,  மாம்பழம் ,  கொய்யா ,  கிவி ,  ஸ்ட்ராபெரி ,  பப்பாளி பழத்தை பொடியாக நறுக்கி கொள். ஒரு பாத்திரத்தில் பழக்கலவையை போட்டு அதனுடன் எலுமிச்சை சாறு ,  சர்க்கரை சேர்த்து கலந்து பிரிட்ஜில் வைத்து குளிர வை. 2  மணி நேரம் கழித்து எடுத்து இதன் மேல் ஐஸ்கிரீமை போட்டு பரிமாறு. விருப்பப்பட்டால் சிறு துண்டுகளாக நறுக்கி   வறுத்த பாதாம் ,  முந்திரியை மேலே தூவியும் ஃப்ரூட் சாலட் வித் ஐஸ்கிரீம் பரிமாறலாம்.

பொதுச் சேவை எப்படி வேண்டுமானாலும் செய்யலாம்

Image
பொதுச் சேவை எப்படி வேண்டுமானாலும் செய்யலாம் பாடம் சொல்லி தர ஒலி பெருக்கியை பயன்படுத்திய தலைமை ஆசிரியர் ஜூன் 26, 2020 ராஞ்சி:ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள தும்கா மாவட்டத்தில் பங்கதி என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் உள்ள நடுநிலைப் பள்ளியில் சுமார் 246 மாணவர்கள் படித்து வருகின்றனர். இவர்களில் 200-க்கும் மேற்பட்டோருக்கு ஸ்மார்ட் போன் வாங்கும் வசதி இல்லை. இதனால் மாணவர்களுக்கு எப்படி பாடம் நடத்தலாம் என்று யோசித்தார்.\   அப்போது ஒலிபெருக்கி அவருக்கு ஞாபகம் வந்தது. அந்த கிராமத்தில் அதிகமான மாணவர்கள் இருக்கும் இடங்களில் அமைந்திருக்கும் பெரிய மரத்தில் இந்த ஒலிபெருக்கியை கட்டினார். அதேபோல் மின்கம்பத்திலும் கட்டினார். பின்னர் பள்ளிக்கூட வகுப்பறையில் இருந்து ஆசிரியர்களை மைக் மூலம் பாடம் எடுக்கச் சொல்ல, மாணவர்கள் மரத்தின் அடியில் இருந்து பாடங்களை கற்பிக்க ஆரம்பித்தனர். கடந்த ஏப்ரல் மாதம் 16-ந்தேதியில் இருந்து தினந்தோறும் இரண்டு மணி நேரம் இப்படி பாடம் கற்பிக்கப்பட்டு வருவதாக அந்த தலைமையாசிரியர் ஷியாம் கிஷோர் சிங் காந்தி தெரிவித்துள்ளார்.   இதுகுறித்து ஷியாம்...